Thursday, January 16, 2014

குடியரசில் பெரியார் உடன்....! - 3

தொடர்ச்சி - 3

அண்ணல் காந்தியின் தேச நலக் கொள்கைகளின் தாக்கதை  திரு.ஈ.வேரா அவர்களின் குறிப்புகளில் குடியரசில் காண முடிகின்றது. உதாரணமாக முதல் குடியரசு பத்திரிக்கையில் வந்த இயந்திரமும் கை ராட்டினமும் என்ற ஒரு கட்டுரை.

இதில் எதற்காக கை ராட்டினம் தமிழகமெங்கும் செயல்படுத்தப்பட வேண்டும், இதனால் ஏழைக் கூலிகள் எவ்வகையான பொருளாதார நன்மை அடைய முடியும் என்ற வகையிலான விவரங்களைக் காண்கின்றோம்.

ஈ.வே.ரா  அவர்களின் கட்டுரையிலிருந்து..

இவ்வளவு நூலையும் ஓர் ஆலை நூற்றுவிடுவதினால் வேலை செய்யக் கூடிய 46,000 பேருக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது. இவ்வளவு பேருக்கும் கிடைக்க வேண்டிய கூலியில் சிறுபகுதி ஒரு சில வேலைக்காரர்களுக்கும், பெரும்பகுதி முதலாளிகள், அன்னிய நாட்டு இயந்திர வியாபாரிகள் ஆகிய இவர்களுக்கும் போய்விடுகின்றது. மகாத்மாவினுடைய சுயராஜ்யத்திற்குப் பொருள் ஏழைகள் பிழைக்க வேண்டுமென்பதே. முதலாளிகளும், அன்னியனாட்டு இயந்திர வியாபாரிகளும் பொருள் சேர்க்க வேண்டுமென்பது மகாத்மாவினுடைய  சுயராஜ்ஜியத்தின் கருத்தன்று. சிலருக்கு உத்தியோகமும் அதிகாரமும் கிடைக்க வேண்டுமென்பதும் அன்று. இந்த அம்சத்தை மனதில் நாம் மனதில் இருத்திக் கொண்டால் இராட்டை இயக்கத்தின் கருத்தைச் சரியாக அறிந்து கொள்ளலாம். ஏழைகளிடத்தும் கூலிக்காரர்களிடத்திலும் அன்பில்லாதவர்களுக்கு மகாத்மா கூறும் சுயராஜ்ஜியத்தின் பொருள் நன்கு விளங்காது.
-குடி அரசு - கட்டுரை 2.5.1925


சுபா

No comments:

Post a Comment