Saturday, June 12, 2010

என் வீட்டுத் தோட்டத்தில்..

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறிய திராட்சை செடி (மரம்/கொடி) ஒன்று வாங்கி அனது தோட்டத்தில் நட்டு வைத்தேன். ஓரளவு வளர்ந்து நிறைய இலைகள் கடந்த ஆண்டு கோடை காலத்தில் (ஜூன் - செப்ட்). ஆனால் ஒரு பழத்தையும் காணோம். பெரிய ஏமாற்றமாகிப் போனது எனக்கு. எனது இல்லத்தின் தோட்டத்தில் சூரிய வெளிச்சம் கொஞ்சம் குறைவு. திராட்சைக்கு நல்ல சூரிய வெளிச்சம் தேவை. ஆக அதனால் தான் திராட்சை வரவில்லையோ என நினைத்து எனது மாமனார் தோட்டத்திற்கு அதனை கொண்டு போய் நட்டு வைக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன். பல வேலைகளுக்கு இடையே அந்த திட்டம் மறந்து விட்டது. நேற்று மாலை தற்செயலாக எனது திராட்சைக் கொடியைப் பார்த்தால் ஆச்சரியம். அழகான குட்டி திராட்சைகள். இது சிவப்பு நிறமாக மாறக்கூடிய திராட்சை. ஆனால் முதலில் பச்சை நிறத்தில் தான் தோன்றுகிறது.

அதன் படத்தை இங்கு இணைத்திருக்கின்றேன்.


மேலும் நான் ஏப்ரல் இறுதியில் நட்டு வைத்த நான்கு தக்காளி கன்றுகளும் இப்போது பூவுடன் இருக்கின்றன. அவற்றை பற்றி அடுத்த முறை எழுதுகிறேன். ஜெர்மனியின் சீதோஷ்ண நிலைக்கு வீட்டில் பயிர்கள் நட்டு சிறப்பாக வளர்ப்பது சற்று சிரமம். அது ஒரு தனிக் கலை. புத்தகம் வாங்கி வைத்து படித்து எந்த செடி எந்த மாதிரியான இடத்தில் வைத்தால் நன்றாக வளரும் என தெரிந்து கொண்டு நட வேண்டும். ஏப்ரலிலிருந்து அக்டோபர் கடைசி வரை இது எனக்கு ஒரு மனம் நிறைந்த பொழுது போக்கு. மேலும் எனது அனுபவத்தை நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

அன்புடன்
சுபா