Monday, September 22, 2003

Punishment..!

இப்போது ஜெர்மனியில் இலவசமாகவே 4 தமிழ் டிவி தமிழ் சானல்கள். இன்று சன் டிவில் ஒரு செய்தி. ஒரு தமிழக அரசியல்வாதிக்கு ஏதோ குற்றத்திற்கு நீதிமன்றத்தில் ஆச்சரியம் தரும் வகையிலான ஒரு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை மதிக்காததால் அவருக்கு சட்டம் நீதி நியாயம் ஆகியவைப்பற்றி புரிய வைக்க வேண்டும் என்பதற்கு மாறுபட்ட ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பின் படி அவர் ஒவ்வொரு நாளும் நூலகத்திற்குச் சென்று காந்தியடிகளின் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்பதுதான்.

அந்தத் தீர்ப்பின் படி இந்த அரசியல்வாதி தனது தொண்டர்கள் சிலரோடு நூலகத்திற்குச் செல்லும் காட்சி செய்திப்பகுதியில் காட்டப்பட்டது. காந்தியின் நூற்களை, அவரைப்பற்றிய விஷயங்கள் அடங்கிய நூற்களைப் படிக்க ஆரம்பித்திருக்கின்றாராம். அவரது தொண்டர்கள் சூழ்ந்திருக்க, தான் இதுவரைக்கும் வாங்கியிருக்கும் நூற்களையும் காட்டினார். வித்தியாசமான தீர்ப்பாக இருக்கின்றது அல்லவா..?

No comments:

Post a Comment