Monday, June 8, 2020

சாதி எப்படி, எப்போது ஒழியும்?

நேற்று Kirthika Tharan ஏற்பாடு செய்திருந்த பேஸ்புக் நேரலை பேட்டி நிகழ்ச்சியின் போது தோழர் Chola Nagarajan எழுப்பிய கேள்விகள்.. பதிலளிக்க அவகாசம் கிடைக்கவில்லை. இங்கே இப்பதிவில் என் பதிகள்.

கேள்விகள்:
1. உலகில் எங்குமே இல்லாத சாதி பற்றியும் பேசவேண்டாமா?
2. மனித சமூகம் எல்லா இடங்களிலும் ஒன்று என்றால் இந்தியாவில்மட்டும் ஏன் சாதி இருக்கிறது?
3. தமிழ்ச் சமூகத்தில் சாதி எப்படி, எப்போது ஒழியும்?

என் பதில்கள்:
1. கண்டிப்பாகப் பேச வேண்டும். அப்போதுதான் இந்தியாவிற்கு வெளியே வாழ்கின்ற ஏனைய இன மக்கள் சாதியென்ற மனித பாகுபாடின்றி நாகரிகத்துடன் இருக்கின்றாகள் என்பதை இந்திய மக்கள் அறிந்து கொள்ள முடியும். மனிதருக்குள் சாதியை வைத்து இனம் பிரித்து கொடூரம் செய்வது அநாகரிகம் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

2. மனித சமூகம் எல்லா இடங்களிலும் ஒன்று தான். பசி, ஏக்கம், அன்பு, நேர்மை, கோபம், அறிவுத் தேடல் என அனைத்திலும் மனித இனத்தின் அடிப்படை ஒன்றுதான். இந்தியாவில் ஏன் சாதி இருக்கிறது என்றால்... வைதீக சமயத்தின் தாக்கம் இயல்பான தொழில் அடிப்படையிலான குழு நிலையைத் தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டதால் எனலாம். மனுதர்மம் சொல்லும் 4 வர்ண பாகுபாட்டை உயர் சாதி என அடையாளம் செய்து கொள்வோர் தொடர்ந்து தக்க வைக்க முயற்சி செய்வதால் சாதியை ஒழிக்க அவர்கள் விரும்புவதில்லை. எந்த வித முயற்சியும் இல்லாமல் உயர் சாதி என்ற அடையாளத்தை மட்டும் வைத்துக் கொள்வதாலேயே பெருமை விரைவாகக் கிடைத்து விடுகின்றது என்பதால் இந்தச் சலுகையை இழக்கவும் பெருவாரியாக `உயர் சாதியினர்` எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் அதனை விட்டுக் கொடுக்க விரும்புவதில்லை.

3. தன் சுயகாலில் நிற்பதே பெருமை என தனது சுய அறிவையும் திறனையும் நம்புவோர் அதிகம் வெளிப்படையாக சாதி அற்ற முறையில் எல்லா நிலையிலும் செயல்படுவது ஒன்று மட்டுமே இதற்கு தீர்வாகும்.


நாங்க எங்க வீட்டில் எல்லா சாதிக்காரரையும் அனுமதிப்போம். நான் சாதியெல்லாம் பார்க்க மாட்டேங்க.. ஆனால் ......

இப்படி `ஆனால்` என ஒரு காரணத்தை உருவாக்காமல் ஒவ்வொருவரும் செயல்பட்டால் சாதி காணாமல் ஓடி ஒழிந்து விடும்.

-சுபா

No comments:

Post a Comment