Thursday, June 25, 2020

கொரோனா தொற்று - தற்கொலைகள்

நெல்லை இருட்டுக்கடை அல்வா கடையின் அதிபர் கொரோனா தொற்று உறுதியானதால் தற்கொலை என்ற செய்தியை வாசித்து அதிர்ச்சியடைகிறேன்.

கொரோனா தொற்று வந்து குணமடைந்து சென்றவர்கள் எண்ணிக்கை தான் அதிகம். இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலுமே இதுதான் உண்மை நிலை.

கொரோனா என்பது உடல் எதிர்ப்புச்சக்தியை பலமிழக்க வைக்கும் ஒரு நோய். தொற்று ஏற்பட்டவர்களுக்கு உடல் எதிர்ப்புச் சக்தியை இழக்கும் போது மரணம் ஏற்படுகின்றதே தவிர சரியான நேரத்தில் தக்க நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் குணமடைந்து சென்றிருக்கின்றார்கள் என்ற செய்தி பொது மக்களை சென்றடையவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகின்றது.

இதனை உறுதி செய்யும் வகையில் கொரோனாவினால் மரணமடைந்தோர் உடலை புதைக்கச் சிலர் செய்கின்ற நாடகங்களும் உடலை குழிகளுக்குள் தள்ளி விட்டு போவது போன்ற செயல்களும் மக்கள் பீதியில் மட்டுமே வாழ்கின்றார்கள் என்பதையும் அறிவியலையும் ஆராய்ச்சிகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நம்பவில்லை என்பதையுமே காட்டுகிறது.

உலக நடப்புக்களையும் அறிவியல் செய்திகளையும் நம்பிக்கை தரும் செய்திகளையும் ஊடகங்கள் பொது மக்களுக்குக் கொண்டு சென்று சேர்க்க வேண்டியது இப்போதைய அவசர தேவை !

-சுபா

No comments:

Post a Comment