20.9.1924 ... சர் ஜான் மார்ஷல் சிந்துவெளி அகழாய்வு அறிக்கையை உலகிற்கு வெளியிட்ட நாள். நூறு வருடங்கள் கடந்து விட்டன.
Thank you Sir John Marshall!
தமிழின் தொன்மையைத், தமிழரது நாகரீகத்தை உலகிற்குப் பறைசாற்றும் இந்தக் கண்டுபிடிப்புகளைப் பற்றி நாம் தொடர்ந்து பேச வேண்டிய அவசியம் உள்ளது.
இன்று நம்மிடையே சிந்துவெளி பண்பாட்டின் கூறுகளையும் அதன் தமிழ் தொடர்ச்சியையும் பரவலாக்கம் செய்து வருபவர் சிந்துவெளி ஆய்வாளர் திரு ஆர் பாலகிருஷ்ணன். அவரது முயற்சிகள் சிந்துவெளிப் பண்பாட்டின் ஆய்வுப்பூர்வமான அகழாய்வு செய்திகளையும் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுகளைப் பரவலாக்கம் செய்யும் பெரும் இயக்கமாக இன்று வளர்ச்சி கண்டிருக்கின்றது.
அவரது பேட்டி அடங்கிய நூலினை அண்மையில் தமிழ் மரபு அறக்கட்டளை 23.8.2024 அன்று வெளியீடு செய்தோம்.
இன்று இந்த நூற்றாண்டு வரலாற்று நிகழ்வை விவரிக்கும் அவரது உரை நிகழ்ச்சி உள்ளது. பாராட்டுக்கள் Balakrishnan R
-முனைவர் க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, ஜெர்மனி.
20.9.2024
No comments:
Post a Comment