Friday, August 11, 2023

ரோம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது பேரரசன் நீரோ பிடில் வாசித்துக் கொண்டிருந்தானா?

 ரோம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது பேரரசன் நீரோ பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என சிலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். வாய்மொழிச் செய்திகளில் சொல்லப்படுவது போல ரோம் தீ பிடித்து எரிந்த போது ரோமானியப் பேரரசன் நீரோ பிடில் வாசிக்கவில்லை.

ஆனால் இசை மீதான அவனது ஆர்வம் அவன் காலத்து கலை சார்ந்த விசயங்கள் பற்றிய புதிய சான்றுகளை உறுதி செய்கின்றன.
அண்மையில் ஜூலை 26 அன்று வெளியிடப்பட்ட செய்தியில் அவன் காலத்தில் நீரோ மன்னனுக்குச் சொந்தமான ஒரு தனியார் கலைக்கூடத்தின் உடைந்த பகுதிகளின் இடிபாடுகள் சமீபத்தில் ரோமில் கண்டுபிடிக்கப்பட்டன.
சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தக் கட்டுமானம் வாட்டிக்கன் சுவர் பகுதிகளோடு சேர்ந்த வகையில் சற்று தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சாய்வான செங்கல் தரைகள் மற்றும் விழுந்த பளிங்கு தூண்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு என்ன நடந்தது.. நீரோவின் ஆட்சி காலத்தில் மக்கள் அச்சத்துடன் இருந்தார்களா என பல தகவல்கள் ஆய்வுலகில் தொடர்ந்து பேசப்படுகின்றன.
-சுபா
11.8.2023
இந்த அகழாய்வு பற்றிய மேலும் செய்திகள் : https://www.miamiherald.com/news/nation-world/world/article277716028.html

No comments:

Post a Comment