எனது குழந்தை பருவத்தை விட இந்தக் காலகட்டத்தில் ஏராளமான நல்ல நூல்கள் என்னைச் சுற்றி இருப்பதாக நான் உணர்கிறேன். நான் மட்டும்தான் இப்படி நினைக்கின்றேனா அல்லது நீங்கள் எல்லோருமே என்னை போலத்தான் நினைக்கின்றீர்களா என்று தெரியவில்லை.
நூல்களைக் கடைகளில் பார்ப்பதும், நேரம் எடுத்து அவற்றை தேடி வாங்கிக் கொள்வதும் எனக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்கள்.
வாங்கி வீட்டிற்குக் கொண்டு வரும் நூல்களை அவை வரலாற்று நூல்களா, பண்பாட்டு நூல்களா, தொல்லியல் நூல்களா, தலைவர்கள் நாடுகள் நகரங்கள் பற்றிய நூல்களா? என தரம் பிரித்து அடுக்கி வைத்து அடுக்கிய அலமாரியில் அவை அழகாகக் காட்சியளிப்பதைப் பார்ப்பதும் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் தருணங்கள்.
இவை எல்லாவற்றையும் விட ஒரு ஓய்வு நாளில் மனதிற்கு பிடித்த ஒரு நூலை எடுத்து பக்கத்தில் அருமையான ஒரு காபியை வைத்துக் கொண்டு நூலை படிப்பதும், நூலில் உள்ள முக்கிய இடங்களைக் கோடிட்டு குறிப்பு எடுத்துக் கொள்வதும் மிகப்பெரிய மகிழ்ச்சி.
இந்த ஆண்டு தொடக்க முதல் கடந்த நான்கு மாதங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நூல்கள் வாங்கி இருக்கின்றேன். அவற்றில் சிலவற்றை படித்து முடித்திருக்கின்றேன். சிலவற்றைப் பற்றி சிறிய அறிமுகமும் திறனாய்வும் எழுதி இருக்கின்றேன்.
ஒவ்வொரு நூலும் தெளிவில்லாத பகுதிகளுக்கு எனக்குத் தெளிவை அளிக்கின்றன.. அறிந்திராத விஷயங்களை அறிய வைக்கின்றன..
உலகை நான் காண்கின்ற பார்வையை எனக்கு மேலும் தெளிவாக்குகின்றன.
வாசித்து மகிழுங்கள்!
-சுபா
23.4.2025
No comments:
Post a Comment