Saturday, June 9, 2012

பப்பாவர் மலர்


இன்றைக்கு என் தோட்டத்திலிருந்து நான் இங்கே பகிர்ந்து கொள்வது பப்பாவர் மலர். இதனை போப்பி மலர் என்றும் சொல்லலாம். தமிழகத்தில் கிடைக்கின்றதா அங்கு இதன் பெயர் என்ன போன்ற விபரங்கள் தெரியவில்லை.



Papaver somniferum என்பது இதன் முழு பெயர். விக்கியில் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
http://en.wikipedia.org/wiki/Papaver_somniferum
Opium poppy, Papaver somniferum, is the species of plant from which opium and poppy seeds are derived. Opium is the source of many narcotics, including morphine(and its derivative heroin), thebaine, codeine, papaverine, and noscapine. The Latin botanical name means the "sleep-bringing poppy", referring to the sedative properties of some of these opiates.

என் தோட்டத்தில் இருப்பது ஒரே ஒரு செடி தான். அதனால் பெரிய ஓப்பியம் விளைச்சலெல்லாம் செய்வதற்கு வாய்ப்பில்லை :-)

இதுவும் பனிக்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்குள் ஒளிந்து கொள்ளும் ஒரு தாவரம். மார்ச் மாத ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தலைகாட்டிக் கொண்டு வளர்ந்து வரும். ஏப்ரல் மாதத்தில் மலர்கள் பூக்கத்தொடங்கி விடும். மலர்கள் ஏறக்குறைய ஒரு மாதத்திற்கும் மேலாக செடியில் அப்படியே இருக்கும்.

முதலில் மலர்கள் ஏறக்குறைய 2 வாரங்களுக்கு மேல் மூடிய இதழ்களுடன் கீழுள்ள படத்தில் இருப்பது போலத்தான் இருக்கும். பின்னர் இது மலர்ந்து விரிந்து காட்சியளிக்கும்.




மிகப் பழமை வாய்ந்த ஒரு தாவரமாக இத்தாவரம் கருதப்படுகின்றது. சுமேரிய இலக்கியங்களிலும் இந்தப் பூக்கள் பற்றிய குறிப்புக்கள் இருப்பதாக விக்கி குறிப்பு சொல்கின்றது.



பூ பூத்து முடிந்தவுடன் பூக்கள் காய்களாக மாறி ஏறக்குறைய ஒரு மாதம் இவை இருக்கும். பின்னர் இலைகள் கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சள் நிறமாக மாறி பின்னர் ஜூலை மாத ஆர்மபத்தில் செடி மீண்டும் மன்னுக்குள் சென்று ஒளிந்து கொள்ளும்.



என்னிடம் உள்ள செடி நான்கு ஆண்டுகளாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் வந்து செல்லும் விருந்தாளி தான் இந்தச் செடி!

சுபா

No comments:

Post a Comment