Friday, March 25, 2011

வசந்த கால வரவுகள்

குளிர்காலம் முடிந்து வசந்த காலம் வந்து விட்டது. இன்றைக்கு ஸ்டுட்கார்ட்டில் சீதோஷ்ணம் 21 டிகிரி செல்சியஸ். நாளை மீண்டும் 13 வரை குறையும் என்று வானிலை அறிக்கை சொல்கின்றது. ஆனாலும் கடந்த 2 நாட்கள் வெயிலைப் பார்ப்பதில் குதூகலமாகத்தான் உள்ளது.

குளிர்காலத்தில் பதுங்கியிருந்த செடிகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மண்ணைப் பிளந்து கொண்டு வந்து விட்டன. எனது தோட்டத்திலும் சறுகுகளாக இருந்த செடிகளில் தளிர் இலைகள் தோன்றுகின்றன. கடந்த செப்டம்பர் நட்டுவைத்த டூலிப், க்ரோகோஸ் செடிகள் முளைத்து பூக்களைக் கொண்டு வந்திருக்கின்றன.

இதோ சில..


No comments:

Post a Comment