தமிழகத்தில் தற்சமயம் தமிழ்சமூகத்தில் ஒட்டு மொத்தமாக பல ஒழுக்கக் கேடுகளுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது மதுபானம்.. மதுபானக் கடைகள் ஆகியவையே. நான் ஜனவரியில் ஒரு வாரம் சென்னையில் இருந்த போது மயிலாப்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தேன். காலை 9 மணிக்கெல்லாம் சந்தைக் கடை பகுதியில் ஒரு கடையில் வரிசையாக ஆண்கள் மதுக்கடை வாசலில் நிற்கின்றார்கள். ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை அது.
இளைஞர், நடுத்தர வயதினர், முதியோர் என பாரபட்ஷமின்றி வரிசையாக பலர்...
மது எவ்விதத்திலும் நம் உடலுக்கும், நம் குடும்பத்திற்கும், நம் சமூகத்திற்கும், நம் நாட்டிற்கும் நலனைத் தரப்போவதில்லை.
மதுவால் ஏற்படும் சீர்கேட்டினை நீண்ட பட்டியல் இடலாம். அது தேவையில்லை. எல்லோரும் அறிந்ததே!
சமூகத்தில் சுயக்கட்டுப்பாடு இல்லாத மனிதர்கள் அதிகரிக்கும் போது கடுமையான சட்டதிட்டங்கள் என்பது நடைமுறையில் அமல் படுத்தப்பட வேண்டிய நிலை தான் ஏற்படும். அது கட்டாயத் தேவையாகவும் ஆகின்றது..
தமிழக் சூழலில் வன்முறை என்பது பல்வகையாகப் பெறுகி விட்டது. சமூக சீர்க்கேடு என்பது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த சூழலில் தானாகவே மனிதர் திருந்துவர் என்பது சாத்தியமன்று. இதற்கு அரசு முதலில் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வேண்டும். இதுவே நிலமையை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முதலில் வழிவகுக்கும்.
மதுபானத்தால் தான் அரசுக்கு வருமானம் வருகின்றது என நினைத்தால் அது சீர்க்கேட்டை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படும் ஒரு நிலையாக அமையும். இது ஆரோக்கியமான ஒரு சமூகம் அமைய வழி வகுக்காது என்பதோடு தார்மீகக் கடமையை செய்யாத ஒரு நிலையையே அரசுக்கு வழங்கும்.
பொருளாதார பலத்தை ஈட்ட எத்தனையோ வழிகள் இப்போது உள்ளன. அவற்றை கடைபிடிக்கலாம். அதிக மனிதவளம் உள்ள மானிலம் தமிழகம். ஒழுக்கக்கேடு இல்லாத மானிலம் இது என பெயர் பெற அரசு மட்டுமல்ல ஒவ்வொரு பிரஜைகளும் முனைய வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment