Saturday, January 31, 2015

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 9

இன்று காலை சந்தித்து நண்பர்களாகிப் போன என் தேசத்து மலேசிய தமிழ்ப் பெண்களுடன் நான்.

எனது அமர்வுக்கும் வந்திருந்தனர் இத்தோழியர். மலேசிய தமிழர் வரலாறு, பதிவுகள் என முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர்.

மலேசியாவில் பூச்சோங் நகரில் தமிழ்க் கல்விச் சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் இவர்கள். கல்வியில் நாட்டமில்லாது போகும் தமிழ் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தரும் நடவடிக்கைகளைச் செய்து வருகின்றனர்.


No comments:

Post a Comment