Saturday, January 31, 2015

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 10

தமிழ் ஆவணப் பாதுகாப்பு - அதன் தேவையும் அவசியமும் என்ற தலைப்பில் இன்று என் அமர்வு நிகழ்ந்தது. 18ம் நூற்றாண்டின் காலின் மெக்கன்சியின் தமிழ் ஆவணத் தொகுப்புக்கள், இச்சேகரிப்புக்கள் இருக்கும் கீழ்த்திசை சுவடியகத்தில் இச்சுவடிகளின் இன்றைய நிலை பற்றி குறிப்பிட்டு பின்னர் 16ம் நூ. தொடங்கி கிருஸ்துவ பாதிரிமார்களின் கையெழுத்துப் பிரதி ஆவணங்கள் பற்றி விளக்கி அவை மின்னாக்க வடிவில் இணையத்தில் அனைவரும் பார்க்கும் வகையில் கிடைப்பதை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை எனது உரையில் விளக்கினேன். 

அமர்வின் போது எடுத்த புகைப்படங்கள்.




No comments:

Post a Comment