Saturday, January 31, 2015

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 12

9வது உலகத் தமிழாராய்ச்சி மானாட்டில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த திராவிடக் கழகத்தின் தலைவர் பெரியவர் வீரமணி அவர்கள் சிறப்பு சொற்பொழிவு அமர்வில் உரையாற்றினார். மிகச் சிற்ப்பானதொரு உரையாக அவரது உரை அமைந்திருந்தது.
  • பெரியார் கொள்கைகள்
  • பன்பாட்டு படையெடுப்பு
  • அயலகத்தில் குறிப்பாக மலேசியாவில் தமிழ் முயற்சிகள்
என இவரது உரை தமிழ் மொழி சார்ந்ததொரு பேச்சாக அமைந்து வந்திருந்தோரைக் கவர்ந்தது.
இவரது பேச்சுக்குப் பின்னர் தொடர்ந்து பேசிய டத்தோஸ்ரீ சாமிவேலு அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பேசினார். தலைமைத்துவ பண்பின் அவசியம், தலைமைத்துவம் கொண்டிருக்க வேண்டிய பண்புகள் என மிக உணர்ச்சிகரமான ஒரு பேச்சாக அவரது பேச்சு அமைந்த்திருந்தது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு டத்தோஸ்ரீ சாமிவேலு அவர்களின் உணர்ச்சிகரமான பேச்சினைக் கேட்டு மகிழ்ந்தேன்.




No comments:

Post a Comment