Saturday, January 31, 2015

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 13

தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான இமயம் அவர்களது உரையும் இன்று இடம்பெற்றது. ஆனால் நிகழ்ச்சி பொறுப்பாளராக இருந்த தமிழகத்தின் திரு.அம்பிகாபதி எந்த அக்கறையையும் எடுத்துக் கொண்டு இந்த முக்கிய பேச்சாளரை முழுமையாக இவரது கட்டுரையை வாசிக்க இடமளிக்கவில்லை. 

பல காலகட்டங்களில் தமிழக நாவல்களின் மையக் கருத்தாக அமைந்த விஷயங்களை அலசும் ஒரு ஆய்வாக இவரது பேச்சு அமைந்திருந்தது. ஆயினும் முழுமையாக கேட்கமுடியாத நிலையே ஏற்பட்டது.

மானாட்டிற்கே பொறுத்தமற்ற சில கட்டுரைகளை வாசிக்க வாய்ப்பு இருந்த வேளையில் தகுதியான ஆய்வுகளை முழுமையாக கேட்டு மகிழ முடியாமல் செய்யும் நிலை நடைபெறும் போது அலுப்புத்தான் ஏற்படுகின்றது.


​suba

No comments:

Post a Comment