Thursday, January 29, 2015

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 4

டாக்டர்.ராதா செல்லப்பன், அவரது கணவருடன் வந்திருந்தார். இவர் கடந்த நூற்றாண்டின் மிக முக்கியமான பதிப்பாசிரியரான பேரா. வையாபுரிப்பிள்ளையின் பேத்தி என்பது தனிச் சிறப்பு. இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர்.

கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் நாங்கள் நட்பில் இருக்கின்றோம். 2003லும் 2009லும் என்னை திருச்சிக்கு அழைத்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் என்னை சொற்பொழிவாற்ற அழைத்திருந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கின்றோம். மகிழ்ச்சியான தருணங்களில் இதுவும் ஒன்று....



சுபா

No comments:

Post a Comment