Monday, October 13, 2003

Vajrayana

"Tantric Grounds and Path" என்ற தலைப்பிலான ஒரு புத்தகம் ஒன்றினை சென்ற ஆண்டு கலிபோர்னியா சென்றிருந்தபோது வாங்கி வந்திருந்தேன். புத்த தத்துவத்தை விளக்கும் ஒரு வழியான வஜ்ராயனாவை விளக்கும் நூல் இது. "வஜ்ராயனா எனும் இந்த வாழ்க்கைப் பாதையை கடைபிடிப்பது அசாதாரணமான ஒன்று. இதனை கடைபிடிக்க விரும்பினால் மிகவும் உயர்ந்த யோக நிலையை கடைபிடிக்க வேண்டும். அதோடு 'Prayer of the stages of the Path' எனப்படும் இந்த இறைவாழ்த்தையும் மனனம் செய்து உணர்ந்து படித்து கடைபிடிக்க வேண்டும்" என்று இந்த நூல் ஆரம்பிக்கின்றது.

அதில் சில வரிகள்; இவை மனதை கவர்ந்தவை:

When I become a pure container
Through common paths, bless me to enter
The essesnce practice of good fortune,
The supreme vehicle, Vajrayana

வஜ்ரயனா எனும் இவ்வழி, சாத்திரங்களை படிப்பதன் வழியாக ஒருவன் புத்தராக முடியாது; மாறாக தந்திரங்களை முறையாகக் கற்று அதனை அனுஷ்டிக்க வேண்டும் என்று கூறுகின்றது. படிக்கப் படிக்க பல புதிய விஷயங்களை இன்நூல் ஆசிரியர் கையாளும் விதம் சிறப்பாக இருப்பதை அதுவும் சித்தர்களின் சிந்தனைகளோடு மிக மிக ஒத்திருப்பதை உணர முடிகின்றது.

No comments:

Post a Comment