
பார்க்கும் இடமெல்லாம் அழகு நிறைந்திருக்கின்றது, இந்த உலகில். இயற்கையின் எழில் வார்த்தைகளினால் விளக்கமுடியாத ஒன்று. இறைவன் இயற்கையாய் என்னோடு கலந்திருக்கும் போது மனம் ஆனந்ததில் லயிக்கின்றது.
எல்லாம் நல்ல நாளே! அதில் இன்று எனக்கு ஒரு இனிய நாள்!
பாரதி இப்படிப் பாடுகின்றான்.
இறைவா! இறைவா!
பல்லவி
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள்
இறைவா! இறைவா! இறைவா! (ஓ - எத்தனை)
சரணங்கள்
சித்தினை அசித்துடன் இணைத்தாய் -அங்கு
சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்.
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய். (ஓ- எத்தனை)
முக்தியென் றொருநிலை சமைத்தாய் - அங்கு
முழுதினையு முணரும் உணர் வமைத்தாய்
பக்தியென் றொரு நிலை வகுத்தாய் - எங்கள்
பரமா! பரமா! பரமா! (ஓ - எத்தனை)
குறிப்பு: இந்தப்பாடலை பேகடா ராகத்தில் நித்யஸ்ரீ பாடியிருக்கின்றார். அவரது Divine Melodies கேட்டுப் பாருங்கள்!
No comments:
Post a Comment