Sunday, December 17, 2017

சாதீயம்

'வருமானம் இல்லாமல் குடும்பமே திண்டாடுகிறது: தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு இல்லை - உடுமலை கவுசல்யாவின் சகோதரர் விரக்தி' என்ற தலைப்பிட்டு பரிதாப அலையை உருவாக்கும் நோக்கத்தில் இந்து நாளேடு ஒரு பதிவினை இன்று வெளியிட்டுள்ளது. இந்த பதிவில் ஒரு வரி கூட மிகக் கொடூரமாக கௌசல்யா அருவாளால் வெட்டப்பட்டதையும் சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதையும் பற்றி வார்த்தைகள் இல்லை.
வெட்டி கொல்லப்பட்ட சங்கரின் தந்தையும் குடும்பமும் படும் பொருளாதார பிரச்சனைகளை இந்தக் கட்டுரையை எழுதிய நிருபர் எழுதவில்லை. மாறாக சாதிய வன்முறையைத் தூண்டி கொடூர காரியங்களைச் செய்தவர்களின் குடும்ப பின்னனியைச் சொல்லி பரிதாப உணர்ச்சியைத் தேட செய்திருக்கும் இம்முயற்சி கண்டிக்கத்தக்கது.
சாதீய கொடுமைகளால் தாழ்த்தப்பட்ட மக்கள் பட்ட கொடுமைகள் பல. இன்று ஒரு கொடுமைக்கு சட்டப்பூர்வமாக ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒரு படிப்பினையாகக் கொண்டு சாதி வெறித்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு மனித நேயத்தை மட்டும் வளர்க்க ஊடகங்கள் செயலாற்ற வேண்டும். அதுவே ஊடக தர்மம். அதைவிட்டு எல்லா செய்திகளையும் போடுவோம் என நீதிக்குப் புறம்பாக
அநீதிக்கு பச்சாதாப அலையை உருவாக்கும் இவ்வகைச் செய்திகளை வெளியிடுவது தவறு . இந்து நாளிதழுக்கு எனது கண்டனத்தைப் பதிகிறேன்.
-சுபா

No comments:

Post a Comment