Tuesday, March 3, 2015

ஜெர்மனியில் உயர்கல்வித் தரம் வாய்ந்தோருக்கு வேலை வாய்ப்பு

இன்று காலை வானொலியில் கேட்ட செய்தி.. ஜெர்மனியில் உயர்கல்வித் தரம் வாய்ந்த அயல் நாட்டவர்களுக்கு வேலை தரும் அனுமதியை திட்டமிட்டு செயல்படுத்தப் போவதாக அரசு முடிவெடுத்துள்ளது. இது படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது. அதில் மிக முக்கியம் என்னவென்றால் ஜெர்மானிய மொழி நன்கு எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

தமிழக மாணவர்கள் ஆங்கிலம் கற்பதோடு கூடுதலாக ஜெர்மானிய மொழியும் படிப்பது அதிகமான வேலை வாய்ப்புக்கள் அமைய நல்ல வாய்ப்பினை வழங்கும் என்று எனக்கு தெரிகிறது. இளம் வயதிலேயே மொழிகளை படிக்க பெற்றோர்கள் தூண்ட வேண்டும். குழந்தைகளுக்கு மொழி கற்றல் என்பது இளமையில் மிக எளிமையாக அமையும்.
வேலை வாய்ப்புக்காக என்று மட்டும் இல்லை.. ஜெர்மானிய மொழி ஆங்கில மொழிக்கு வேர் மொழி என்பதோடு பல தத்துவ நூல்கள் ஜெர்மானிய மொழியில் இருக்கின்றன என்பது ஒரு முக்கிய விஷயம்.

ஜெர்மனியோடு இந்திய வர்த்தகத்தொடர்பு என்று எடுத்துக் கொண்டால் குறிப்பிட்ட சில துறைகளை நாம் பட்டியலிடலாம்.
1. கணினி மென்பொருள் துறை - உதாரணமாக கால் செண்டர் வகை பணிகள், எஞ்ஞினியரிங் துறைகள் SAP, Bosch, Daimler,
2.chemical industry, pharmaceutical
3. ப்ரிண்டிங்
4.auto mobile industry
இது தவிர ஏனைய பல துறைகளில் நல்ல பயிற்சி பெற்ற திறன் உடயவர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
உதாரணமாக
-வயதானவர்களைப் பராமரிக்கும் தாதி
-எரி பொருள் ஆய்வுத்துறை
-இயந்திரத்துறை

இவற்றிற்லெல்லாம் வருங்காலத்தில் உள்ளூரில் போதிய பயிற்சி பெற்ற உழைக்கும் சக்தி குறைவாக அமையும் என்று அரசு நினைப்பதால் கல்வித் தகுதி பெற்ற அதே வேளை ஜெர்மானிய மொழியும் நன்கு பேசத் தெரிந்தோருக்கு வேலை வாய்ப்புக்கள் அமையும் என்று தெரிகின்றது.
அருகாமையில் எடுத்துக் கொண்டால் மிக உயரிய வேலையில்லா மக்கள் தொகை எண்ணிக்கை கொண்டிருக்கும் ஸ்பெயின், ரோமேனியா போன்ற நாடுகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டமை தெரிகின்றது. ரஷ்யர்களும் அப்படியே.

இந்த மூன்று நாடுகளிலும் பலர் இப்போது மிகத் தீவிரமாக ஜெர்மானிய மொழி படிக்கின்றனர். குறிப்பாக ஸ்பெயின் பட்டதாரிகள் ஜெர்மானிய மொழி படித்து ஜெர்மனிக்கு வேலை தேடி வருவது கடந்த சில ஆண்டுகளில் நடக்கும் ஒரு விஷயம் தான்.

ஆசிய நாடுகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும். குறிப்பாக சீனா, தாய்லாந்து வியட்நாம் ஆகிய நாடுகளைச் சொல்வேன்.. இவர்கள் மிகுந்த விழிப்புடன் அமெரிக்கா தவிர்த்த ஏனைய மேற்குலகத்திலும் ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்புக்களைத் தேடி வந்து பெறுகின்றனர்.
தமிழ் நாட்டிலும் இத்தகைய முயற்சிகளைத் தொடங்கலாம். மற்றொரு மொழி படிப்பது எப்போதுமே கூடுதல் நன்மையைத் தான் தருமே தவிர கீழ்மையைத் தராது.

No comments:

Post a Comment