Saturday, March 7, 2015

JK's Letters to the Schools - 11

2003க்குப் பிறகு மீண்டும் இத்தொடரை தொடர்கின்றேன்.

இன்று காலை வாசித்த போது எழுந்த கருத்துக்களோடு..

JK's Letters to the Schools - 11

ஜே.கே 15 December 1981 எழுதும் கடிதத்தில் இப்படி எழுதுகின்றார்
  .. We are trying politically, legally and socially to bring order in the outer world in which we are living, and inwardly we are confused, uncertain, anxious and in conflict. Without inward order there will always be danger to human life. ..
The universe in the supreme sense has known no disorder.Nature, however terrifying to man, is always in order.. The universe has its own movement of time.Only when man has ordered his life, will he realize the eternal order....We must learn what is disorder and what is order. Disorder is essentially conflict, self-contradiction and division between becoming and being. Order is a state in which disorder has never existed.- J.K.

மேல் உள்ள வாசகத்தை வாசித்த போது என்னுள்ளே எழுந்த எனது சிந்தனை....கீழே தொடர்கின்றது.

உலகம் ஒரு ஒழுங்குடன் தான் இயங்குகின்றது. உலகத்தில் அங்கத்துவம் பெறுகின்ற மனிதர்களாகிய நாம் உலகம் சுட்டும் முழுப் பரிமாண ஒழுங்குடன் இயங்க, இணைந்து நாம்  இயங்குகின்றோமா என்பதே கேள்வியாகின்றது.

ஒழுங்கு தனி மனிதர் ஒவ்வொருவரிடத்திலும் இருக்க வேண்டிய ஒரு பண்பு.  புறத்தே சமூகத்தில் 'அது சரியில்லை இது சரியில்லை' என சுலபமாகக் குறை கூறித் திரியும் நமக்கு உள்ளே நம் மனத்தினுள்ளே எழுகின்ற எண்ணங்கள், வரையறைகள், நம் செயல்பாட்டை நிர்ணயிக்கும் சிந்தனைகள், ஆகியவை ஒரு ஒழுங்குடன் இயங்குகின்றனவா என்பதை நம்மை நாமே கேட்டு அதனை பரிசோதனைச் செய்வதை பெருவாரியாக புறக்கணித்து விடுகின்றோம். தினம் தினம் நான் என்னுள்ளே கேட்க வேண்டிய கேள்விகள் இவை. தனி மனித சிந்தனை, பதப்படுத்தல் என்பது நிகழ இத்தகைய கேள்வியை ஒவ்வொரு தனி மனிதரும் பிறரை நோக்கிச் சுட்டாமல் தனக்குள்ளேயே..எனக்குள்ளேயே.. நானே கேட்டுக் கொள்ள வேண்டியது ஒழுங்க தனி மனித கடப்பாடாக பேணாடிப்படை விஷயமாக ஆகின்றது.

  • எனது கருத்தில் ஒரு ஒழுங்கு இருக்கின்றதா..?
  • எனது  வாசிப்பின் போது எனது கிரகிக்கும் தன்மையில் ஒரு ஒழுங்கு இருக்கின்றதா..?
  • நான் எடுத்துக் கொண்ட கொள்கையில் ஒரு ஒழுங்கு இருக்கின்றதா..?
  • நான் செய்ய நினைத்த.. செய்து முடிக்க நினைத்த ஒரு விஷயத்தை சாதிக்கும் ஒழுங்கு எனக்கு இருக்கின்றதா..?
  • என் மனதினுள் பொறாமை, வெறுப்பு, கோபம், சோம்பேறித்தனம் போன்ற ஒவ்வாத குணங்கள் வந்து அமர்ந்து கொண்டு ஆட்சி செய்யாமல் தவிர்க்கும்  ஒழுங்கு எனக்கு இருக்கின்றதா..?
  • எதிலும் மெத்தனம்.. நடந்தால் நடக்கட்டும் நடக்காவிட்டால் என்ன என்ற பொறுப்பற்ற தன்மையை விலக்கும் ஒழுங்கு எனக்கு இருக்கினதா?
  • என் மனத் தூய்மை போல, உடல் தூய்மை.. புறத்தூய்மை.. சுற்றுப்புறத்தூய்மை ஆகியவற்றை கண்ணும் கருத்துமாகப் பேணும் மனத்தெளிவும் ஒழுங்கும் எனக்கு இருக்கின்றதா..?
..என்பன தினம் தினம் நான் என்னைக் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் தான்.

எல்லாவற்றிற்கும் மேலாக.. நாம் வாழும் உலகில் சக மனிதர்களோடு, விலங்குகள், பறவைகள், தாவரங்கள் போன்ற சக உயிரினங்களோடு ஒன்றி ஒத்து வாழ்கின்ற நிலையையே இயற்கை நமக்கு கொடுத்திருக்கின்றது. அதில் நான் மட்டுமே ஒரு உறுப்பினர். எனக்காகவே உலகம் இருக்கின்றது.. நான் என்னை மட்டும் பார்த்துக் கொண்டு போகின்றேன்..பிறர் எப்படி இருந்தால் என்ன.. எப்படி ஒழிந்தால் என்ன.. என் சுயநலன் சுய தேவைகள் ஆகியனவே முக்கியம் என்று உலகப் பார்வையை விரிவாக்காமல், தன்னுளேளே மட்டும் குறுக்கிக் கொண்டு செயல்படும் மனிதர்களாக இருப்பது இந்த உலகத்திற்கு நாம் செய்யும் அநீதி அல்லவா?

சுபா

No comments:

Post a Comment