Saturday, March 7, 2015

என் வீட்டுத் தோட்டத்தில்.. இன்று!

வசந்தம் வந்து விட்டது.. என் தோட்டத்தில்..

அன்னைக்கு எப்படி எல்லா குழந்தைகளுமே முக்கியம்தான் என்றாலும் முதல் குழந்தை மேல் சற்றே சிறிய கூடுதல் பாசம் இருக்கும் தானே.. அதே போல எனக்கும் என் தோட்டத்தில் முதலில் முளைத்துப் பூத்திருக்கும் இந்த மலர்கள் மேல் சற்றே  கூடுதல் பிரியம்.

Crocus  க்ரோக்குஸ் மலர்கள்.. ஒரே ஒரு மலர்தான் ஒரு செடியில் பூக்கும்.. பூவே செடி அளவிற்கு இருக்கும்..  இந்தத் தன்மை கொண்டது இந்த மலர்.

தோட்டத்தில் மஞ்சள் ஊதா,கரும் ஊதா என மூன்று வகை நட்டு வைத்திருக்கின்றேன்.. ஆயினும் இந்த மஞ்சள் செடியே முதலில் பூத்திருக்கின்றது.  நேற்று எடுத்த புகைப்படம். இன்றைய சனிக்கிழமையை இந்த மலர்கள் உங்களுக்கு  மகிழ்ச்சிக்குரியதாக ஆக்கட்டும்.



சுபா

No comments:

Post a Comment