Sunday, February 1, 2015

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 19

9வது உலகத் தமிழார்ய்ச்சி மாநாட்டில் த.ம.அ , ஃபேஸ்புக் நண்பர்களைச் சந்தித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பலரை முதன் முதலாகச் சந்திக்கின்றேன். ஆயினும் நெடுநாள் பழகிய நட்பும் உடனே தோன்றிவிடுகின்றது. 

இது தமிழர்களுக்கே உரிய ஒரு சிறப்பு பண்பு என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது. 


1. மலேசியாவின் திரு.ராஜா பிள்ளை. என் மேல் மிகுந்த பிரியம் கொண்டு த.ம.அ நடவடிக்கைகளாலும் ஈர்க்கபட்டு தன்னை இப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள இணைந்திருக்கின்றார். எனக்கு நூல்களை பரிசாக வழங்கினார்.



2. நம் த.ம.அ நண்பர் ஆஸ்திரேலியாவைச் சார்ந்த அன்பு ஜெயா. மலேசிய பெண்ணை மணந்ததால் மலேசியர் தானே இவரும். முதன் முதல் சந்திப்பு.. ஆனால் பேசிச் சிரித்து மகிழ்ந்தோம்.



3.குமாரபாளையம், டாக்டர். மதிவாணன் அவர்கள்.. த.ம.அ செயலவை குழு உறுப்பினர்



4. 
அட்வகேட் ​சந்திரிகா சுப்பிரமணியன்  - ஆஸ்திரேலியா.. அன்பு ஜெயா அறிமுகப்படுத்தியவுடனேயே என்னை நெடுநாள் பார்க்க வேண்டும் என நினைத்திருந்ததாகச் சொல்லி எனக்கு அவரது ஒரு தமிழ் நூலையும் வழங்கினார். மிக அன்பான தோழி இவர். புதிய நட்பு மனதிற்கு மகிழ்ச்சியளிக்கின்றது.

சுபா

No comments:

Post a Comment