Friday, August 1, 2025

ஸ்டுட்கார்ட் நகரில் சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆண்டு திருவிழா

 


கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆண்டுத திருவிழா நடைபெற்றது. ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இந்தத் திருவிழாவிற்கு வந்திருந்தார்கள்.

இந்த ஸ்டுட்கார்ட் பகுதியில் ஏறக்குறைய 25 ஆண்டுகளாக இந்தக் கோயில் உருவாக்கப்பட்டு ஒரு கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் செயல்பட்டு வருகிறது.
சித்தி விநாயகருக்குத் தேர் ஒன்றை உருவாக்கி அதனை சாலையின் ஒரு பகுதியில் சுற்றிவர அரசாங்க அனுமதி பெற்று இந்த நிகழ்ச்சியின் போது தேர் பவனி வந்தது.
தமிழ் மக்கள் மட்டுமின்றி ஜெர்மானிய மக்களும் சாலையில் வந்து நின்று பார்த்து ரசித்தனர்.
வந்திருந்த பக்தர்களுக்குக் கோயில் நிர்வாகம் சாம்பார் சாதம் கொடுத்து உபசரித்தார்கள்.
இந்த ஸ்டுட் காட் பகுதியில் தற்சமயம் நான்கு கோயில்கள் இருக்கின்றன. அதில் ஒன்று இந்த ஆலயம்.
-சுபா
1.8.2025














No comments:

Post a Comment