இது ஒரு சர்வதேச பத்திரிக்கை அச்சகம் என்ற குறிப்புடன் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் இங்குதான் காந்தி தனது Indian Opinion என்ற பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தினார். பின்னர் இந்தப் பத்திரிக்கை Opinion எனப் பெயர் மாற்றம் கண்டது. 1903 முதல் இந்தப் பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1961ம் ஆண்டு இப்பதிரிக்கை முயற்சி நின்று போனது.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஓர் இந்திய கம்பெனிக்குச் சட்டத்துறை உதவிகள் செய்யும் பணிக்காக நியமிக்கப்பட்டு 1893ம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா வந்தடைந்தார். 1914ம் ஆண்டுவரை, அதாவது 20 ஆண்டுகள் தன் குடும்பத்துடன் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவின் இந்த டர்பன் புறநகர் பகுதியில் இங்கே வாழ்ந்து வந்தார்.
இந்த அச்சு கூடத்தில் மகாத்மா காந்தியின் தமிழ் கையெழுத்து உள்ளது. அவருக்குத் தமிழில் கையெழுத்தை எழுத கற்றுக் கொடுத்தவர் தமிழ்நாட்டிலிருந்து அங்கு நீதிமன்றத்தில் பணிபுரியச் சென்றிருந்த தமிழ்நாட்டின் அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையான ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவில் அப்போது வாழ்ந்து வந்த தில்லையாடி வள்ளியம்மை அடக்குமுறைக்கு எதிராக ஏற்படுத்திய போராட்டம் மகாத்மா காந்திக்கு சுதந்திரம் தேவை என்பதை வலியுறுத்தும் வகையில் பெருமளவில் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது.
2015ல் தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினருடன் ஒரு நிகழ்ச்சியில் தென்னாப்பிரிக்கத் தமிழர்களைச் சந்திக்க டர்பன் சென்றிருந்த போது உள்ளூர் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது.
No comments:
Post a Comment