Monday, March 10, 2025

மைசூர் புலி திப்பு

 


மைசூர் புலி திப்பு சுல்தானின் வாள் மோதிரம் மற்றும் வாசனை திரவியம் வைக்கப்படும் குடுவை - இன்று இவை இருப்பது இங்கிலாந்தின் பிரித்தானிய அருங்காட்சியகத்தில்.

திப்பு சுல்தானின் வாளை நேரில் பார்த்தபோது ஒரு வகையில் மனம் கலங்கியது. அவரது வீரம் நினைக்கும் போது நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கிறது.
ஆங்கிலேயர்களிடம் மண்டியிட்ட பல மன்னர்களும் சிற்றரசர்களும் இருந்த வேளையில் அவர்களுக்கு எதிராக தொடர்ந்து போர் தொடுத்து பலமுறை அவர்களை விரட்டி தோற்கடித்து பின்னர் அவர்களுக்கு எதிரான போரில் தனது அரசை காப்பாற்றும் முயற்சியில் கொலை செய்யப்பட்ட திப்பு சுல்தானின் வீரத்தை பறைசாற்றும் வாள்.
திப்பு சுல்தானை ஆங்கிலேயர்கள் அச்சத்துடன் தான் அணுகினார்கள். திப்புவின் வீரத்தின் மீது அவர்களுக்கு அசைக்க முடியாத மரியாதை இன்றும் தொடர்கிறது.
-சுபா

No comments:

Post a Comment