-பெண்கள் உயர் கல்வி கற்பதற்கும்
-சுயமரியாதையோடு தன் காலில் நிற்பதற்கும்
-அறிவோடு செயல்பட்டு தனக்கான மரியாதையை நிலை நிறுத்திக் கொள்வதற்கும்
-பரந்த பார்வையோடு உலகைக் காண்பதற்கும்
- தனக்கான சுய அடையாளத்தைத் தனித்துவத்துடன் வெளிப்படுத்திக் கொள்வதற்கும்
ஆயினும் கூட
தங்களைப் பின்னுக்கு இழுக்கும்
-உணர்வுகளுக்கும்
-ஐயங்களுக்கும்
-அச்சங்களுக்கும்
-உறுதியற்ற தன்மைகளுக்கும்
-சமையலறையை வாழ்க்கையாக நினைக்கும் சிந்தனைக்கும்
- சுய பச்சாதாபத்திற்கும்
-தன் மேல் நம்பிக்கை இல்லா தன்மைக்கும்
-தன்னை நம்பாமல் ஓர் ஆணை மட்டுமே முழுமையாக நம்பிக்கொண்டிருக்கும்
பெண்களுக்கு விடிவு வராது.
பெண்களே, உலகம் பல வாய்ப்புகளை நமக்கு வழங்கிக் கொண்டே இருக்கின்றது. "அவற்றை நாம் முயற்சி எடுத்து பார்க்கின்றோமா?" என்பதுதான் பெண்கள் தினமான இன்று நாம் ஒவ்வொருவரும் நம்மை கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி!
பெரும்பாலான பெண்களின் வாழ்க்கை சீரழிவதற்குக் காதல் காரணமாகின்றது. தன்னை இழந்து ஓர் ஆணை நம்பி தன் வாழ்க்கையை ஒப்படைப்பதற்கு முன் அதற்கு அந்த நபர் தகுதியானவர் தானா என்பதை ஒன்றுக்கு பலமுறை யோசித்துக் கொள்ளுங்கள். படித்த உயர் பதவியில் இருக்கும் பெண்கள் கூட திருமணம் ஆன ஆண்களோடு தொடர்பு வைத்துக் கொள்வதும், மற்ற பெண்ணை ஏமாற்றியவர்களைக் காதலிப்பதும் திருமணம் செய்வது கொள்வதும் அவர்கள் வாழ்க்கையை அவர்களே சீரழித்துக் கொள்வதற்குக் காரணமாகிறது.
சீராகப் பயணிக்க வேண்டிய பல பெண்களின் வாழ்க்கை திட்டமிடாத போக்கினால் சிதைந்து போகிறது.
பெண்களே
இதுவரை இல்லை என்றாலும்
இன்று தொடங்கி
உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள்.
வாசிப்பின் வழியும் பயணங்களில் வழியும், விரிவான அறிவார்ந்த நட்பு வட்டங்களின் வழியும் உங்கள் அறிவை விரிவாக்கிக் கொள்ளுங்கள்.
உணர்வுக்கு ஆட்படுவது நிம்மதியைக் குலைக்கும்.
அறிவோடு செயல்படுவது
வாழ்க்கையை மேம்படுத்தும்!
அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்!
-சுபா
8.3.2025
No comments:
Post a Comment