Thursday, March 13, 2025

பேருந்தில் வாசித்தல்

 வாசிக்கும் சமூகம்



லண்டன் நகரில் ஓடுகின்ற பேருந்துகள் ஒவ்வொன்றிலும் நுழைந்த உடன் ஒரு பெட்டி இருக்கிறது. அதில் அன்றைய மெட்ரோ பத்திரிக்கை வைக்கப்பட்டிருக்கின்றது. Please recycle என்ற சொற்கள் பெட்டி மேல் எழுதப்பட்டிருக்கின்றன. நாம் வாசித்து விட்டு அதே பேருந்தில் அல்லது அடுத்த பேருந்தில் கூட மற்றவர்கள் வாசிக்க வைத்து விட்டு செல்லலாம்.
பத்திரிகைகளை வாசிக்க வேண்டும், நடப்பு செய்திகளை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும், தகவல் அறிந்த சமூகமாக மக்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வெளிப்படையாகத் தெரிகின்றது.
இப்படி தமிழ்நாட்டு பேருந்துகளும் முயற்சியைத் தொடங்கினால் பத்திரிகை வாசிப்பு பெருகும். பாடல்களைக் கேட்டுக் கொண்டும் செல்போனைத் தோண்டி அகழாய்வு செய்து கொண்டிருக்கும் போக்கு மாறி பத்திரிக்கை வாசிக்கும் பண்பு மீண்டும் உயிர் பெறும்.
-சுபா

No comments:

Post a Comment