Friday, October 20, 2017

ஆண்களுக்குத் திருமணம்

தமிழகத்தில் தற்சமயம் ஆண்களுக்குத் திருமணம் நடைபெறுவதில் பலத்த சிரமம் இருப்பதாக ஒரு பிம்பம் காட்டப்படுகின்றது. குருக்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பெண் கிடைக்கவில்லை. ஆக, கணினித் தொழிலுக்குச் சென்றிருந்தால் பெண் கிடைத்திருக்குமே என ஒரு புலம்பல். கணினித் தொழிலில் இருந்தாலும் ஆசிரியர் தொழிலில் இருந்தாலும் கூட பெண் கிடைக்கவில்லையே என இன்னுமொரு புலம்பல்.
அதில் குறிப்பாக தம்மை மேல்தட்டு சாதி வர்க்கம் என நினைப்போர் அல்லது நடுத்தர சாதியினர் என்ற நிலையில் இருப்போர் என்ற சூழலில் இது அதிகமாக உள்ளது.
எனக்குத் தெரிந்த சூழலிலேயே திருமணத்தை நாடும், ஆனால் திருமணம் நடைபெறாத பெண்கள் பலர் இருக்கின்றனர். நன்கு படித்தும் உயர் பதவியிலும் கூட இருக்கின்றனர். ஏழ்மையான சூழலில் எளிமையான வாழ்க்கையை நடத்தும் பெண்களும் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை.
எனக்குத் தெரிந்து இதற்கு முக்கிய காரணம் சாதி மட்டும் தான்.
பெண் கிடைக்கவில்லை எனச் சொல்லும் ஒவ்வொரு ஆண் மகனும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தோரும் தங்கள் மனதைத் தொட்டு உண்மையைப் பேச முன் வரவேண்டும். இத்தகையோர் பட்டியலில் இருப்பது கீழ்க்காணும் வரிசை மட்டுமே:
1. தன் சாதியில், அப்படி இல்லையென்றால் தனக்கு உயர்ந்த சாதியில் இல்லையென்றால் தன் சாதியிலிருந்து அடுத்த நிலையில் உள்ள ஒன்று இரண்டு நிலை சாதியில்.
2. பெண் வசதியான குடும்பத்தைச் சார்ந்திருக்க வேண்டும். தனக்கு பொருளாதார ரீதியாக உதவும் குடும்ப பின்புலம் இருக்க வேண்டும்.
3.பார்க்க வெள்ளைத்தோலுடன் இருக்க வேண்டும். ஒல்லியாக இருக்க வேண்டும்.
2ம் 3ம் இருந்தாலும் 1 இல்லையென்றால் அந்தப் பெண் பட்டியலில் இடம் பெற மாட்டார். ஏனென்றால் அம்மா தற்கொலை செய்து கொள்வார், அப்பாவின் மானம் போய்விடும், குடும்பத்தார் வெளியே தலைகாட்ட முடியாது... இன்னும் இன்னும்..எனக் காரணங்கள் சொல்வர்.
ஆக, இப்படி ஆண்கள் ஒரு வரையறையை வைத்துக் கொண்டு பெண் கிடைக்கவில்லையே என ஏன் புலம்புகின்றீர்கள். நியாயமாக இருக்கின்றதா?
சாதி என்ற ஒரு சிந்தனையைக் கடந்தால் எத்தனையோ பொருத்தமான பெண்கள் உங்கள் கண்முன் தென்படுவார்களே..
இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் திருமணமாகாத ஆண்கள் இந்த பூசி மெழுகும் பொய்க்காரணத்தைச் சொல்லிக் கொண்டு தன்னையே ஏமாற்றிக் கொண்டிருப்பரோ..!
சுபா

No comments:

Post a Comment