ஜெர்மனி ப்லவ்பேரன் தொல்மாந்தர்கள் அருங்காட்சியகம்
தொன்மையான மனித இனங்கள் குழந்தை பிறப்பை அதிசயத்துப் பார்த்து தாய் வடிவத்தை வழிபடும் உருவமாக வடிவமைக்க தொடங்கிய காலகட்டம் தொடங்கி உலகின் பல்வேறு பகுதிகளில் தாய் தெய்வ வழிபாடு என்பது தொடங்கி இருக்கின்றது.
ப்லவ்பேரன் தொல்மாந்தர்கள் அருங்காட்சியகத்தில் இந்த தொல் வடிவ தாய் வடிவம் வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது. இது முன்பு வாழ்ந்து அழிந்ததாகக் கருதப்படும் மாமுத் என்று அழைக்கப்படுகின்ற மிகப் பெரிய விலங்கின் கொம்புகளினால் உருவாக்கப்பட்ட வடிவமாகும்.
உலக வரலாற்றில் மிக முக்கிய அரிய பொருட்களாக பாதுகாக்கப்படுகின்றவற்றில் இந்த வடிவம் சிறப்பிடம் பெறுகின்றது.
ஜெர்மனிக்கு வருபவர்கள் இந்த அருங்காட்சியகம் வந்து கட்டாயமாக இந்த தாய் வடிவத்தைப் பார்வையிடுவது தொல்பழங்கால மனிதர்களின் ஆரம்ப கால கடவுள் வழிபாட்டின் தொடக்கத்தை அறிந்து கொள்ள நிச்சயம் உதவும்.
-சுபா
19.7.2023




No comments:
Post a Comment