Tuesday, July 18, 2023

38,000 ஆண்டுகள் பழமையான நீர் பறவை சிற்பம்

 ஜெர்மனி ப்லவ்பேரன் தொல்மாந்தர்கள் அருங்காட்சியகம்




நீர் பறவை சிற்பம்- இன்று உலகின் அழிந்து போன விலங்குகளில் ஒன்றான மாமூத்தின் கொம்புகளிலிருந்து தொல்மாந்தர்கள் உருவாக்கிய பல பொருட்கள் ஜெர்மனி ஹோலெஃபெல்ஸ் குகைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு படத்தில் இருப்பது 38,000 ஆண்டுகள் பழமையான ஒரு நீற்பற்வையின் நுணுக்கமான சிற்பம்.
இதுவரை கிடைக்கப்பட்ட மிகப்பழமையான பறவையின் சிற்பம் என இது தொல்லியல் அறிஞர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. உடலோடு நெருக்கமாக ஒட்டியபடி இந்தப் பறவையின் சிறகுகள் இருப்பது போல இதனை தொல்மாந்த கலைஞன் வடிவமைத்திருக்கின்றார்.
உலகின் தொன்மையான பண்பாடுகள் சிலவற்றுள் பறவைகள் மனிதர்கள் வாழ்கின்ற உலகுக்கும் இறந்து போனோர் வாழ்கின்ற உலகுக்குமிடையே தொடர்பினை ஏற்படுத்தும் பாலமாகக் கருதப்படுகின்றன.





-சுபா

No comments:

Post a Comment