Tuesday, May 7, 2019

அட்சய திருதியை

சென்ற ஆண்டு ஏப்ரல் 18 நான் வெளியிட்ட பதிவு -

அட்சய திருதியை என்பதன் பொருள் அறியாமல் நகைக்கடைகளைத் தேடி ஓடும் நண்பர்கள் கொஞ்சம் வாசித்துப் பார்க்க இக்கட்டுரையைப் பகிர்கிறேன். நகை வாங்க விரும்புபவர்கள் .. ஆசைப்பட்டோம், தேவை இருக்கின்றது,.. என்றால் வாங்குங்கள்.

எதற்காக இல்லாத ஒரு பொய்யான கதையை வணிக உத்திக்காக வளர்த்து, ஒரு பொய்யை உண்மையாக்கும் முயற்சி ??

நம் மக்களும் எதையும் வாசிப்பதுமில்லை.. காரணம் கேட்பதுமில்லை..
தங்க வைர நகைகள், காசு.. என்று சொன்னால் ஆசைப்பட மட்டும் அறிந்திருக்கின்றனர். காரணம் கேட்க விரும்புவதில்லை. பண்டிகைகள், சடங்குகளின் பொருளறிந்து ஒவ்வொரு செயலையும் செய்வோமே!!
-சுபா

//அட்சயதிருதியின் நோக்கமே பிறருக்கு தானங்கள் கொடுக்கவேண்டும் என்பதுதான். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இல்லறத்தானின் (சிராவகத்தான்) கடமைகளில் ஒன்றான துறவறத்தாரை ஆகார தானத்தால் தாங்குதல் ஆன “விருந்தோம்பலை”க் குறிப்பதாகிறது. ஆனால், அதுவே பின்னாளில் நோக்கம் மாறி தேவர்களால் பொழியப்பட்ட விலையுயர்ந்த நகைகளை மக்கள் தங்கள் வீடுகளுக்கு அள்ளி சென்றதை எடுத்துக்கொண்டு விட்டார்கள். அதன் அடிப்படையில் அன்றைய தினம் நகை வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நினைப்பில் செயல்பட தொடங்கிவிட்டார்கள்.பண்டிகைகளின் உண்மையான நோக்கத்தை அறிந்து, ஏழைகளுக்கு தம்மால் முடிந்ததைக் கொடுத்து உதவுங்கள். அதனால் அவர்கள் மனம் குளிர்ந்தால், தன்னாலேயே நம் செல்வம் பெருகும். அப்படி முடியாதவர்கள் ஏழை சிறுவர்களுக்கு கரும்புச் சாற்றினையாவது கொடுத்து “அட்சயதிருதியை” கொண்டாடுங்கள்.//

No comments:

Post a Comment