Saturday, May 18, 2013

மனம் எந்த விதமான நிலையிலிருந்தாலும் மலர்களைப் பார்க்கும் போது புத்துணர்ச்சி தோன்றும்.

இன்று சிலருக்கு பிறந்த நாளாக இருக்கலாம். சிலருக்குப் பொழுது மிக மனம் நிறைந்து  மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்திருக்கலாம்.சிலருக்கு ஏமாற்றம் தரும் வகையில் இருந்திருக்கலாம், சிலருக்கு கவலையும் வேதனையும் தோல்வியும் கூட அமைந்திருக்கலாம்.

எல்லாருக்கும் இன்றைய நாள் இனிய நாளாக அமைய எனது தோட்டத்து டூலிப் மலர்களை இங்கே தருகின்றேன்.









டூலிப்களில் பல விதங்களைச் சோதனை செய்ய நினைத்து சென்ற ஆண்டு நட்டு வைத்த முயற்சியின் பலனாக அமைப்பிலும் வர்ணத்திலும், வடிவத்திலும் வெவ்வேறு வகையான மலர்கள் தோட்டத்தில்  இப்போது மலர்ந்து எழில் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

சுபா

No comments:

Post a Comment