Wednesday, April 9, 2025

The Knights Templar நூல் விமர்சனம் - பகுதி 2

 


நம்பிக்கைகள் மனிதர்களை அசாத்தியமான பல காரியங்களை நிகழ்த்த வைத்திருக்கின்றன. நம்பிக்கைகளுக்காகத் தங்கள் உயிரையும் பணயம் வைக்கும் மனிதர்கள் இருக்கின்றார்கள். தாம் பின்பற்றுகின்ற சமய நம்பிக்கைக்காக தனது உயிரையும், தங்கள் வாழ்நாளையும் அர்ப்பணிக்கின்ற ஆழமான உறுதியான எண்ணத்துடன் வாழ்கின்ற மனிதர்களும் இருக்கின்றார்கள். அத்தகைய மனிதர்களைப் பற்றி உலக வரலாறு பல தகவல்களைப் பதிவு செய்துள்ளது. அந்த வகையில் ஐரோப்பிய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்ற குழுவினராகக் கருதப்படுபவர்கள் தி நைட் டெம்ப்ளர்ஸ் (The Knight Templars ).
புகழ்பெற்ற கதாசிரியர் டான் பிரவுன் அவர்களது டாவின்சி கோட் நாவல் வெளிவந்த பிறகு இந்த நைட் டெம்ப்ளர் என்று அழைக்கப்படுகின்ற குழுவினரைப் பற்றிய பேச்சுக்களும் கலந்துரையாடல்களும் பரவலாக எழுந்தன. டான் பிரவுன் அவர்களது அடுத்தடுத்த நாவல்கள் ஒவ்வொன்றும் இவர்கள் பற்றியும் இவர்கள் வரலாற்றில் பெற்ற முக்கியத்துவம் பற்றியும், அதன் பின்னர் அவர்களது வீழ்ச்சி, அவ்வீழ்ச்சிக்கு பின்னர் எவ்வாறு இன்றும் இவர்களது ஆளுமை மறைமுகமாக உலகின் வல்லரசு நாடுகளில் தொடர்கின்றது என்ற வகையிலும் அமைந்தன.
ஒரு வரலாற்றுச் செய்தியைப் புராணக் கதைகள் மழுங்கடிக்கச் செய்ய முடியும். அதே நிலை தான் நைட் டெம்ப்ளர் என அழைக்கப்படுகின்ற இந்த போர் வீரர்களுக்கும் நடந்தது எனலாம். அந்தப் புராணக் கதைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு வரலாறு இவர்களைப் பற்றி என்ன சொல்கின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு நெடு நாளாக இருந்தது.
அண்மையில் எனது இங்கிலாந்துக்கான பயணத்தின் போது இப்போர் வீரர்களின் மையங்களாக இங்கிலாந்தில் இருக்கின்ற இரண்டு பகுதிகளுக்கு நேரில் சென்று வந்தேன். அதில் ஒன்று இங்கிலாந்தின் தென்கிழக்கு நகரமான டோவர் நகரில் அமைந்திருக்கின்ற நைட் டெம்ப்ளர்ஸ்களது சிதைந்த ஒரு ஆலயத்தின் தரைத்தளப் பகுதி. இது என்று பாதுகாக்கப்படுகின்ற ஒரு வரலாற்றுச் சின்னமாக அமைந்திருக்கின்றது என்பதோடு இதற்கு அருகாமையில் உள்ள சில பகுதிகள் பொதுமக்கள் செல்ல முடியாத, தனியாருக்குச் சொந்தமான இடங்களாக அமைந்திருக்கின்றன. இவர்களைப் பற்றி பேச தொடங்கினாலே ரகசியங்களும் மர்மங்களும் இவர்கள் வரலாற்றோடு இணைந்து வருகின்றன என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
அதற்கு அடுத்ததாக, இன்று நைட் டெம்ப்ளர் என்று சொல்லப்படுகின்ற இந்தப் போர் வீரர்களுக்கு மையமாக அமைந்திருக்கின்ற லண்டன் மாநகரில் இருக்கின்ற டெம்பிள் சர்ச் என்ற ஒரு தேவாலயம். இந்த தேவாலயம் ஒரு ரகசிய அமைப்பு போல இயங்கிக் கொண்டிருக்கின்றது என்றாலும் பொதுமக்கள் இதன் உள்ளே வந்து இங்குள்ள அனைத்து பகுதிகளையும் சுற்றிப் பார்த்து செல்லக்கூடிய வகையில் இத்தேவாலயம் அமைந்திருக்கின்றது என்பது சிறப்பு. இன்று ஐரோப்பாவின் ஸ்பெயின், அயர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, போலந்து, போர்த்துகள்இத்தாலி, கிரேக்கம், சைப்ரஸ், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பல நாடுகள், எகிப்து, ஜெருசலம் என பல பகுதிகளில் விரிவடைந்து இருந்தாலும் கூட, இவர்களின் மையமாகத் திகழ்வது இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருக்கின்ற இந்த டெம்பிள் சர்ச் தேவாலயம் தான்.
இந்த நைட் டெம்ப்ளர் போர் வீரர்களுக்கு தலைவராக இருப்பவர் கிராண்ட் மாஸ்டர் என அழைக்கப்படுகின்றார். தற்பொழுது கிராண்ட் மாஸ்டராக பொறுப்பில் இருக்கும் Robin Griffith-Jones எழுதிய The Knights Templar என்ற நூலை அதே தேவாலயத்தில் வாங்கினேன். இந்த நூல் கூறுகின்ற செய்திகளை இனி காண்போம்.

இந்த நூலின் அத்தியாயம் நைட் டெம்ப்ளர் எனப்படுபவர்கள் யார்? என்ற விளக்கத்தோடு தொடங்குகின்றது. சிலுவைப்போர்கள், சகோதரத்துவ செயல்பாடுகள், புனிதப் பயணிகள், லண்டனில் அமைக்கப்பட்ட புதிய கோயில், டெம்ப்ளர்களும் புனித கோப்பையும், அவர்களது வீழ்ச்சி, தற்போதைய நிலை என்ற வகையில் நூலின் ஏனைய பக்கங்கள் அமைந்துள்ளன.

இடைக்கால ஐரோப்பாவின் மிகப் புகழ்பெற்ற ராணுவ அமைப்பு தான் இது. ஐரோப்பாவின் கிறிஸ்துவ மன்னர்களும் மாவீரர்களும் புனித நகரமான ஜெருசலேமில் ஏசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட இடத்தை கிறிஸ்தவர்களுக்காக மீட்டெடுக்கவும், 'கடவுளின் திருச்சபையை விடுவிக்கவும்' போப்பாண்டவர் அர்பன் IIவிடுத்த அழைப்பிலிருந்து டெம்ப்லர்கள் உருவானார்கள்.
சிலுவைப்போர் ஐரோப்பிய வரலாற்றை புரட்டிப்போட்ட ஒரு வரலாற்று நிகழ்வு. டெம்ப்லர்களின் வரலாறு முதல் சிலுவைப் போரில் தொடங்கியது, 1096 முதல் 1291 வரை நைட் டெம்ப்ளர் ராணுவம் மிகப்பெரிய அளவிலான சிலுவைப் போர்களையும் சிறிய அளவிலான போர்களையும் நிகழ்த்தின. புனித குன்றான சாலமன் கோயில் இருக்கும் இடத்தை இஸ்லாமிய அரேபியர்களிடம் இருந்து மீட்டெடுத்து கிறிஸ்தவ ஆதிக்கத்தை நிலை நாட்டுவது இதன் அடிப்படை நோக்கமாக இருந்தது. அதற்காக நிகழ்த்தப்பட்ட ஏறக்குறைய 200 ஆண்டுகள் காலவாக்கிலான போரில் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். இப்பகுதியே ரத்த வெள்ளத்தில் மூழ்கியது என்பது வரலாற்றில் அழிக்க முடியாத சான்று. அது இன்றும் தொடர்கின்றது மற்றொரு வடிவில் என்பது நிகழ்கால அரசியல்!
இன்றைய ஜெருசலேம் நிலப்பகுதியில் அமைந்திருக்கின்ற சாலமன் கோயிலுக்குப் புனித பயணம் செல்வது கிறிஸ்தவ மத நம்பிக்கையைக் கடைப்பிடிப்பவர்களின் தலையாய நோக்கமாக இருந்தது. ஆகவே அயர்லாந்து இங்கிலாந்து தொடங்கி ஐரோப்பாவின் பல பகுதிகளில் வாழ்கின்ற கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றியவர்கள் பாதயாத்திரையாக இப்புனித தலத்தை நோக்கி வருவது முக்கிய நிகழ்வாக அமைந்திருந்தது.
பாதுகாப்பற்ற, மிகவும் கடினமான பயணத்தைக் கொண்டதான இப்புனித பயணத்தை நிகழ்த்த விரும்புவர்களுக்குப் பாதுகாப்பை வழங்கும் ராணுவமாகவும் உணவு, தங்கும் வசதி ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கும் அதற்கு தேவைப்படும் பொருளாதார தேவைகளை வங்கி போல நிர்வகித்து புனித யாத்திரை செல்பவர்களுக்கு உதவுவது இவர்களின் மைய நோக்கமாக இருந்தது.
தொடக்கத்தில் மிக எளிய வறுமை நிறைந்த புனித யாத்திரை செய்வோருக்கான பாதுகாவலர்களாக அறியப்பட்ட இவர்கள் படிப்படியாக பலம் பொருந்திய, ஏராளமான சொத்துகளுக்கு உரிமை கொண்டவர்களாக வளர்ச்சி கண்டனர். இன்று நமக்கு நன்கு பரிச்சயமான பாண்டு பத்திரம், அனைத்துலக வங்கி நிர்வாகம் ஆகியவற்றிற்குத் தொடக்கப் புள்ளியாக இவர்களது செயல்பாடுகள் அமைந்தன என்றால் அதனை மறுக்க முடியாது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய பணக்காரர்களாக வளர்ச்சி கண்ட இவர்கள் சைப்ரஸ் தீவையும் வாங்கி அங்கு நைட் டெம்ப்ளர் தலைமையகத்தைக் கட்டினார்கள். மெடிட்டரேனியன் கடலில் மிக முக்கியமான நிலப்பகுதியில் சைப்ரஸ் தீவு அமைந்திருக்கின்றது என்பதே இதற்குக் காரணம்.
அயர்லாந்து இங்கிலாந்து தொடங்கி பிரான்ஸ் ஸ்பெயின் இத்தாலி ஜெர்மனி கிரேக்கம் என பல நாடுகளைக் கடந்து வருகின்ற பாத யாத்திரிகர்கள் ஜெருசலேம் வரை வரும் போது அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு சைப்ரஸ் தீவில் அமைந்திருக்கும் தலைமை மையம் அமைந்தது இலகுவாக அமைந்தது.
கத்தோலிக்க தலைமை மையமான வாத்திக்கனில் தலைமை குருவான போப்பின் ஆதரவும் இவர்களுக்குத் தொடக்கத்தில் இருந்தது.
இந்த நூல் இப்போர் வீரர்கள் எப்போது எதற்காக உருவானார்கள்? இவர்களுக்கு ஜெருசலேம் மன்னரின் ஆதரவு எப்படி கிட்டியது? கத்தோலிக்க மத குருவின் ஆதரவு எப்படி கிட்டியது? அடுத்தடுத்து நடந்த சிலுவைப் போர்கள் போன்ற பல்வேறு தகவல்களை ஆண்டு வரிசையில் தெளிவாக எளிதாக விளக்குகின்றது.
டான் பிரவுனின் டா வின்சி கோட் நாவலில் குறிப்பிடப்படுகின்ற முக்கிய காரணமாக அமைவது நைட் டெம்பர் குழுவினரும் அவர்களின் தலைவரான கிராண்ட் மாஸ்டரும் போற்றி பாதுகாப்பது இயேசு கிறிஸ்துவின் ரத்த சம்பந்தத்திலான வாரிசுகளின் பாதுகாப்பு என்பதாக அமையும். ஆனால் இந்த நூலில் இது குறிப்பிடப்படவில்லை.
Holy grail அதாவது, புனித பாத்திரம் எனக் குறிப்பிடப்படுவது உண்மையிலேயே வைன் வைக்கப்பட்டிருந்த இயேசு கிறிஸ்து இறுதியாக அருந்திய வைன் நிறைந்த பாத்திரமா அல்லது அவர் சிலுவையில் அறையப்பட்டபோது அவரது உடலிலிருந்து வடிந்த ரத்தத்தைப் பிடிக்கப் பயன்படுத்திய கிண்ணத்தையா அல்லது வேறு ஏதேனும் மறைப்பொருளையா என்பது மர்மமாகவும் குழப்பமாக இருக்கின்றது என இந்த நூலின் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
இந்த நூலின் ஆசிரியர் நைட் டெம்ப்ளர் அமைப்பின் தற்போதைய கிரான்ட் மாஸ்டர் என்பதை நாம் மீண்டும் மனதில் கொள்ள வேண்டும். புனித பாத்திரத்தைப் பற்றி அவரது கருத்தாக அமைவது டான் பிரவுனின் நாவல் குறிப்பிடுகின்ற தகவலுக்கு மாறாகவும் அதே வேளை அது இல்லை என்பதை மறுக்காமல் அது மர்மமும் குழப்பமும் நிறைந்தது என்றும் கூறி முடிந்து விடுகின்றது. ஆக இதுவே மர்மமாகத்தான் இருக்கின்றது.
ஐரோப்பாவின் மிகப் புகழ்பெற்ற ராணுவ அமைப்பாக திகழ்ந்த நைட் டெம்ப்ளர் குழுவினர் 14ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய அழிவைச் சந்தித்தனர். பிரான்ஸ் மன்னன் நான்காம் பிலிப்ஸ் டெம்ப்ளர்ஸ் மீது பல்வேறு குற்றங்களைச் சுமத்தி அவர்களைப் பிடித்து கொலை செய்த நிகழ்வுகள் வரலாற்றின் இருண்ட பக்கங்கள். பிரான்ஸ் மன்னனின் சூழ்ச்சிக்கு வாத்திக்கணும் ஒத்துழைத்தது என்பது கூடுதல் அழுத்தத்தை இந்த அமைப்பிற்கு வழங்கியது.
அக்கால கட்டத்தில் ஐரோப்பா முழுவதும் இயங்கி வந்த நைட் டெம்ப்ளர் ராணுவ வீரர்களை பிரான்ஸ் மன்னனின் குழுவினர் சிறைபிடித்து அவர்களை ஒப்புதல் வாக்குமூலம் வழங்கச் செய்து பிறகு கொன்று குவித்தனர். அப்போது கொலையுண்டவர்களில் அன்றைய கிராண்ட் மாஸ்டர் ஜேக்கஸ் டி மோலெ அவர்களும் அடங்குவார்.
நைட் டெம்பள்ர் குழுவினர் 14ஆம் நூ தொடக்கத்தில் தேடித் தேடி கொல்லப்பட்டதன் காரணமாக அவர்களில் தப்பியவர்கள் ரகசியமாக தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தனர். போர்த்துகல் மன்னர் வெளிப்படையாகவே இப்படி தப்பித்தவர்களைப் பாதுகாக்க அழைப்பு விடுத்தார். அதன் பின்னர் மறைமுகமான வாழ்க்கையை இவர்கள் தொடர்ந்தனர். பலர் ஐரோப்பா மட்டுமன்றி அமெரிக்காவிற்கும் புலம்பெயர்ந்தனர். அவர்களது தொடர்பு தொடர்ந்தது.
இன்று லண்டன் டெம்பிள் சர்ச் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சின்னமாக திகழ்கின்றது என்றாலும் அதன் பின்னணியில் எவ்வகை செயல்பாடுகள் நிகழ்கின்றன என்பது மறைவாகத்தான் உள்ளது.






Sunday, March 23, 2025

சித்தார்த்தா - கால்வ்



 சித்தார்த்தா நாவலுக்காக நோபல் பரிசு பெற்றவர் இலக்கியவாதி ஹெர்மான் ஹெஸ்ஸ. இவர் ஒரு ஜெர்மானியர். 55 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது சித்தார்த்தா நாவல்.

தமிழில் திரிலோக சீத்தாராம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.
இன்று தற்செயலாக அவர் பிறந்த ஊரான கால்வ் நகருக்குச் சென்றிருந்தோம்.
அங்கு எதிர்பாராத விதமாக ஹெர்மான் ஹெஸ்ஸ அவர்களது வழித்தோன்றல் உறவினர்கள் நாங்கள் அவரது சிற்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது தேடிக் கொண்டு வந்து பேசினார்கள்.
சித்தார்த்தா நாவலைப் பற்றி உரையாடினோம். ஹெர்மான் அவர்களது தாத்தா கூண்டர் ஒரு இலக்கியவாதி. சுதந்திரமான இலக்கியம் படைக்க வேண்டும் என முயற்சித்தவர்.
கூண்டர் அவர்கள் இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் 25 ஆண்டுகள் இருந்தவர். மலையாள மொழியின் தந்தை என அழைக்கப்படுகின்றார். இது பற்றி பின்னர் விரிவாக எழுதுகின்றேன்.
அதில் அவரது உறவினர்கள் அண்மையில் வெளியிட்ட இரண்டு நூல்களை எங்களுக்கு பரிசளித்தார்கள். கூண்டர், ஹெர்மன் ஹெஸ்ஸ இருவர் பற்றியும் எழுதப்பட்ட இரண்டு ஜெர்மானிய மொழி நூல்கள் அவை.
எதிர்பாராத ஆனால் ஆச்சரியமான மகிழ்ச்சி நிறைந்த ஒரு அனுபவமாக அமைந்தது.
-சுபா
23.3.2025














Wednesday, March 19, 2025

சர் ஜான் மார்ஷல் அவர்களது பிறந்தநாள்

 


இன்று சர் ஜான் மார்ஷல் அவர்களது பிறந்தநாள். சிந்துவெளி நாகரிகத்தின் தனிச்சிறப்பை உலகுக்கு வெளியிட்டவர் சர் ஜான் மார்ஷல்.

Illustrated London News ஆய்விதழில் சர் ஜோன் மார்ஷல் தனது சிந்து வெளி நாகரிக கண்டுபிடிப்பை வெளியிட்ட நாள் 20.9.1924.
20 செப்டம்பர் 2024 அவரது ஆய்வறிக்கை வெளியிடப்பட்ட நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழ் மரபு அறக்கட்டளை ஓர் இலச்சினை வெளியிட்டு சிறப்பு செய்தோம். ஒரு நாள் கருத்தரங்கம் ஒன்றையும் பச்சையப்பா கல்லூரியில் ஏற்பாடு செய்து சிந்துவெளி ஹரப்பா நாகரிகம் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டோம்.
சர் ஜான் மார்ஷல் அவர்களது பங்களிப்பும் ஆய்வுகளும் நம் பெருமை!
19.3.2025



Tuesday, March 18, 2025

டார்வின்

 


லண்டன் பயணத்தில் ஆறு புதிய நூல்களை வாங்கி வந்தேன். அனைத்தும் வரலாறு மற்றும் அறிவியல் தொடர்பானவை தான்.

நண்பர்கள் சந்திப்பின் போது சில நூல்கள் பரிசளித்திருக்கின்றார்கள். இப்படி நூல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேற்று இரவு டார்வின் பற்றிய, குறிப்பாக அவரது உலக ஆய்வுப் பயணம் பற்றிய நூல் ஒன்று படிக்க தொடங்கினேன்.
கடலில் நீண்ட உலகப் பயணம்... மிகத் தீவிரமாக ஆய்விலேயே கவனம் வைத்து உலகுக்கு புதிய வெளிச்சத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றார் டார்வின்.
முன் தயாரிப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், ஆவணப்படுத்தல் முயற்சி, அவணப்படுத்திய ஆவணங்களை ஆய்வு செய்தல், அவற்றை முறையாக வெளியிடுதல் என பல்வேறு வகையில் டார்வின் மேற்கொண்ட முயற்சிகள் தான் இன்று நமக்கு வழிகாட்டியாக அமைகின்றன.
கிருத்துவ கத்தோலிக்க மத நம்பிக்கைகளை அசைத்துப் பார்க்கும் evolution, natural selection கருத்தாக்கங்களை அவர் வெளியிட்ட போது அவருக்கு எவ்வகையான எதிர்ப்புகள் இருந்திருக்கும் என்பது நம்மால் ஊகிக்க முடியும். அறிவியல் எப்போதும் மத நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கும் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும்; உலகம் பற்றிய புது தெளிவை மக்களுக்கு வழங்கும்.
டார்வினை பற்றி பேசுவதும் அவரது கண்டுபிடிப்புகளை அவரது ஆய்வுகளைப் பற்றி பேசுவதும் இப்போதும் நமக்கு மிக மிக அவசியம் என்று நினைக்கின்றேன்.
லண்டன் நகரில் உள்ள natural history museum டார்வின் ஆய்வுப்பகுதி ஒன்றைக் கொண்டிருக்கின்றது. அவர் சேகரித்து வந்த பலரும் பொருட்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.
அறிவியலை சிந்திப்போம்
அறிவியலை வாசிப்போம்
அறிவியலை பேசுவோம்.
-சுபா

Saturday, March 15, 2025

லண்டனில் தமிழ் மக்கள் சந்திப்பு




 லண்டனில் தமிழ் மக்கள் சந்திப்பு. இலக்கிய ஆளுமைகள் பேராசிரியர் நித்தியானந்தன், பத்மநாப ஐயர், நவஜோதி, மீனா, ஓவியர் ராஜா என பலரும் வந்திருந்து இன்று அருமையான ஒரு சந்திப்பு நிகழ்ச்சியாக அமைந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு லண்டன் தமிழ் மக்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.









அம்பேத்கரை புரிந்து கொள்ளல் - கௌதம சன்னா

 லண்டன் நகரில் உள்ளவர்கள் கலந்து கொள்க. சனிக்கிழமை காலை 10:30 க்கு.



https://www.facebook.com/share/v/1XPHx3b7Zq/


Thursday, March 13, 2025

பேருந்தில் வாசித்தல்

 வாசிக்கும் சமூகம்



லண்டன் நகரில் ஓடுகின்ற பேருந்துகள் ஒவ்வொன்றிலும் நுழைந்த உடன் ஒரு பெட்டி இருக்கிறது. அதில் அன்றைய மெட்ரோ பத்திரிக்கை வைக்கப்பட்டிருக்கின்றது. Please recycle என்ற சொற்கள் பெட்டி மேல் எழுதப்பட்டிருக்கின்றன. நாம் வாசித்து விட்டு அதே பேருந்தில் அல்லது அடுத்த பேருந்தில் கூட மற்றவர்கள் வாசிக்க வைத்து விட்டு செல்லலாம்.
பத்திரிகைகளை வாசிக்க வேண்டும், நடப்பு செய்திகளை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும், தகவல் அறிந்த சமூகமாக மக்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வெளிப்படையாகத் தெரிகின்றது.
இப்படி தமிழ்நாட்டு பேருந்துகளும் முயற்சியைத் தொடங்கினால் பத்திரிகை வாசிப்பு பெருகும். பாடல்களைக் கேட்டுக் கொண்டும் செல்போனைத் தோண்டி அகழாய்வு செய்து கொண்டிருக்கும் போக்கு மாறி பத்திரிக்கை வாசிக்கும் பண்பு மீண்டும் உயிர் பெறும்.
-சுபா

Wednesday, March 12, 2025

பினாங்கிலிருந்து வெளிவந்த தமிழ் வார மாத நாளிதழ்கள்

 பிரித்தானிய நூலகத்தில் 19ஆம் நூற்றாண்டு இறுதியில் மலாயாவின் பினாங்கிலிருந்து வெளிவந்த தமிழ் வார மாத நாளிதழ்கள் அப்போதைய பல நிகழ்வுகளுக்கு ஆதாரங்களாக அமைகின்றன. அவற்றில் சத்தியவான், பினாங்கு விஜய கேதனன் ஆகிய இதழ்களை இன்று ஆய்வு செய்யும் வாய்ப்பு கிட்டியது.






Tuesday, March 11, 2025

பிரித்தானிய நூலகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்கள்

 பிரித்தானிய நூலகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல்கள் வழங்கப்பட்டன. இங்கு நூலகத்திற்கு வருவோர் இந்த சிறந்த ஆய்வு நூல்களை வாசித்து பயன்பெறலாம். பிரித்தானிய நூலகம் சார்பாக ஆசியவியல் துறையில் தமிழ் பிரிவுக்குப் பொறுப்பேற்று இருக்கும் திருமதி ஆரணி இந்த நூல்களைப் பெற்றுக் கொண்டார்.




வேள்விக்குடி செப்பேடுகள் - பிரத்தானிய நூலகத்தில்

 


வேள்விக்குடி செப்பேடுகள்
இன்று நேரில் பார்வையிட்டேன்.
10 செப்பேடுகள் 27.5 x 8 அளவிலான மெல்லிய செப்பு வளையத்தால் இணைக்கப்பட்டுள்ளன. வளையத்தின் மேல் எந்த முத்திரையும் இல்லை.
செப்பேடுகளில் உள்ள எழுத்துக்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. வரிகள் 1- 30 வரை மற்றும் 142 -150 வரை கிரந்த எழுத்துருவிலும். வரிகள் 31 லிருந்து 141 வரை 151ல் இருந்து 155 வரை வட்டெடுத்து தமிழ் எழுத்துருவிலும் அமைந்துள்ளன. தமிழ் பகுதிகளில் வருகின்ற சமஸ்கிருத எழுத்துக்கள் கிரந்தத்தில் உள்ளன. செப்பேடுகள் ஒவ்வொன்றும் கிரந்த எழுத்துகளால் வரிசை எண் போடப்பட்டுள்ளன.
சமஸ்கிருத பகுதி சிவபெருமானை புகழ்ந்து பாண்டியர்கள் பரம்பரையை புகழ்ந்து கூறும் புராண கதையிலிருந்து தொடங்குகிறது.
தமிழ் பகுதி இந்த செப்பேடு குறிப்பிடும் நன்கொடையைக் குறிப்பிடுகிறது.
பாண்டிய மன்னன் பல்யாகக்குடுமி பெருவழுதி வேள்விக்குடி என்ற கிராமத்தை நற்கூரன் அதாவது கொற்கை கிராமத்தின் தலைவன் வேத வேள்விகள் செய்வித்தமைக்காக வழங்கிய நிலக் கொடையைப் பற்றி கூறுகிறது.
இந்தச் செப்பேடு மேலும் எவ்வாறு அவனது பாண்டியன் எதிரிகள் இந்த நிலப் பகுதியை கைப்பற்றி ஆட்சி செய்தார்கள் என்ற வரலாற்றுச் செய்தியை கூறுகிறது. பல போர்களுக்குப் பிறகு பாண்டியர்கள் வம்சத்தில் பிறந்த பராந்தக நெடுஞ்செழியன் கைப்பற்றி இப்பகுதியில் தனது ஆட்சியை நிலை நிறுத்தினான், அமைதியைக் கொண்டு வந்தான் என்றும் குறிப்பிடுகின்றது.
மேலும் தகவல்கள் பின்னர்..
-சுபா
11.3.2025

https://www.facebook.com/share/v/1YefxTbCQG/

Monday, March 10, 2025

மைசூர் புலி திப்பு சுல்தானின் வாள்.

 மைசூர் புலி திப்பு சுல்தானின் வாள்.

இக்காணொளியைப் பார்த்து மகிழுங்கள்.
https://www.facebook.com/share/v/1935RiEUge/

மைசூர் புலி திப்பு

 


மைசூர் புலி திப்பு சுல்தானின் வாள் மோதிரம் மற்றும் வாசனை திரவியம் வைக்கப்படும் குடுவை - இன்று இவை இருப்பது இங்கிலாந்தின் பிரித்தானிய அருங்காட்சியகத்தில்.

திப்பு சுல்தானின் வாளை நேரில் பார்த்தபோது ஒரு வகையில் மனம் கலங்கியது. அவரது வீரம் நினைக்கும் போது நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கிறது.
ஆங்கிலேயர்களிடம் மண்டியிட்ட பல மன்னர்களும் சிற்றரசர்களும் இருந்த வேளையில் அவர்களுக்கு எதிராக தொடர்ந்து போர் தொடுத்து பலமுறை அவர்களை விரட்டி தோற்கடித்து பின்னர் அவர்களுக்கு எதிரான போரில் தனது அரசை காப்பாற்றும் முயற்சியில் கொலை செய்யப்பட்ட திப்பு சுல்தானின் வீரத்தை பறைசாற்றும் வாள்.
திப்பு சுல்தானை ஆங்கிலேயர்கள் அச்சத்துடன் தான் அணுகினார்கள். திப்புவின் வீரத்தின் மீது அவர்களுக்கு அசைக்க முடியாத மரியாதை இன்றும் தொடர்கிறது.
-சுபா

சிந்துவெளி அகழாய்வு அரும் பொருட்கள்

சிந்துவெளி அகழாய்வு அரும் பொருட்கள் -பிரித்தானிய அருங்காட்சியகத்தில் Room No.33

https://www.facebook.com/share/v/1QMmDm8aQg/


Saturday, March 8, 2025

இசைஞானி இளையராஜா சிம்பொனி அரங்கேற்றத்தில்..

 இசைஞானி இளையராஜா சிம்பொனி அரங்கேற்றத்தில்..









லண்டன்

மகளிர் தினம் 2025



 -பெண்கள் உயர் கல்வி கற்பதற்கும்

-சுயமரியாதையோடு தன் காலில் நிற்பதற்கும்
-அறிவோடு செயல்பட்டு தனக்கான மரியாதையை நிலை நிறுத்திக் கொள்வதற்கும்
-பரந்த பார்வையோடு உலகைக் காண்பதற்கும்
- தனக்கான சுய அடையாளத்தைத் தனித்துவத்துடன் வெளிப்படுத்திக் கொள்வதற்கும்
ஏராளமான வாய்ப்புகள் குவிந்து கிடக்கும் காலம் இது.
ஆயினும் கூட
தங்களைப் பின்னுக்கு இழுக்கும்
-உணர்வுகளுக்கும்
-ஐயங்களுக்கும்
-அச்சங்களுக்கும்
-உறுதியற்ற தன்மைகளுக்கும்
-சமையலறையை வாழ்க்கையாக நினைக்கும் சிந்தனைக்கும்
- சுய பச்சாதாபத்திற்கும்
-தன் மேல் நம்பிக்கை இல்லா தன்மைக்கும்
-தன்னை நம்பாமல் ஓர் ஆணை மட்டுமே முழுமையாக நம்பிக்கொண்டிருக்கும்
பெண்களுக்கு விடிவு வராது.
பெண்களே, உலகம் பல வாய்ப்புகளை நமக்கு வழங்கிக் கொண்டே இருக்கின்றது. "அவற்றை நாம் முயற்சி எடுத்து பார்க்கின்றோமா?" என்பதுதான் பெண்கள் தினமான இன்று நாம் ஒவ்வொருவரும் நம்மை கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி!
பெரும்பாலான பெண்களின் வாழ்க்கை சீரழிவதற்குக் காதல் காரணமாகின்றது. தன்னை இழந்து ஓர் ஆணை நம்பி தன் வாழ்க்கையை ஒப்படைப்பதற்கு முன் அதற்கு அந்த நபர் தகுதியானவர் தானா என்பதை ஒன்றுக்கு பலமுறை யோசித்துக் கொள்ளுங்கள். படித்த உயர் பதவியில் இருக்கும் பெண்கள் கூட திருமணம் ஆன ஆண்களோடு தொடர்பு வைத்துக் கொள்வதும், மற்ற பெண்ணை ஏமாற்றியவர்களைக் காதலிப்பதும் திருமணம் செய்வது கொள்வதும் அவர்கள் வாழ்க்கையை அவர்களே சீரழித்துக் கொள்வதற்குக் காரணமாகிறது.
சீராகப் பயணிக்க வேண்டிய பல பெண்களின் வாழ்க்கை திட்டமிடாத போக்கினால் சிதைந்து போகிறது.
பெண்களே
இதுவரை இல்லை என்றாலும்
இன்று தொடங்கி
உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள்.
வாசிப்பின் வழியும் பயணங்களில் வழியும், விரிவான அறிவார்ந்த நட்பு வட்டங்களின் வழியும் உங்கள் அறிவை விரிவாக்கிக் கொள்ளுங்கள்.
உணர்வுக்கு ஆட்படுவது நிம்மதியைக் குலைக்கும்.
அறிவோடு செயல்படுவது
வாழ்க்கையை மேம்படுத்தும்!
அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்!
-சுபா
8.3.2025

Friday, January 3, 2025

மத்திய ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கிரேக்க கல்வெட்டுகள்


மத்திய ஆசியாவில் உள்ள தஜிகிஸ்தான் நாட்டில்  உள்ள ஒரு மலைப் பாறையில் பண்டைய கிரேக்க கல்வெட்டுகள் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

பண்டைய பாக்டிரியன் என அழைக்கப்பட்ட இப்பகுதியில்   கிரேக்க எழுத்தில் உள்ள இக்கல்வெட்டு, "ΕΙΔΙΗΛΟ Υ…ϸΑΟΝΑΝϸΑΕ ΟΟΗ-ΜΟ ΤΑΚ-ΤΟΕ" என்றுள்ளது." மன்னர்களின் மன்னன்" என்று இதனை மொழிபெயர்க்கலாம் என பாக்டீரிய மொழி ஆய்வில்  நிபுணரான சிம்ஸ்-வில்லியம்ஸ் (Nicholas Sims-Williams) கூறுகின்றார்.

பாக்ட்ரியா என்பது மத்திய ஆசியாவில் உள்ள இந்து குஷ் மலைத்தொடர் மற்றும் ஆக்ஸஸ் நதிக்கு (Oxus River) இடையில் தற்போது அமு தர்யா நதி (Amu Darya River) என்று அழைக்கப்படும் ஒரு பண்டைய வரலாற்றுச் சிறப்புகள் கொண்ட பகுதியாகும். அமு தர்யாவின் துணை நதிகளில் ஒன்றான "பால்க்" என்ற பெயரிலும் இப்பகுதி அழைக்கப்படுகிறது.

வரலாற்று ரீதியாக இது ஒரு ஒருங்கிணைந்த நிலப்பகுதியாக இருந்தாலும், இப்பகுதி இப்போது துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உட்பட பல மத்திய ஆசிய நாடுகளிடையே பிரிக்கப்பட்டுள்ளது. உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் மற்றும் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குண்டூஸ் ஆகியவை இன்று அதன் மிக முக்கியமான இரண்டு நகரங்களாகும்.

பண்டைய கிரேக்க தொல்பொருள் சான்றுகளின் அடிப்படையில், ஈரானின் கிழக்கே மற்றும் இந்தியாவின் வடமேற்கில் உள்ள பகுதிகள் கிமு 2500 முதல் இப்பகுதியிலிருந்த பேரரசுகளின் தாயகமாக இருந்ததாகக் அறியப்படுகின்றன.

கிமு 6ஆம் நூ, சைரஸ் தி கிரேட் பாக்ட்ரியாவைக் கைப்பற்றி பாரசீகப் பேரரசில் சேர்த்தார். கிமு 331 இல் கௌகமேலா போரில் Battle of Gaugamela (Arbela) மூன்றாம் டேரியஸ் அலெக்சாண்டரிடம் வீழ்ந்தபோது, ​​​​பாக்டீரியா கடும் குழப்பத்தில் வீழ்ந்தது. வலுவான உள்ளூர் எதிர்ப்பின் காரணமாக, பாக்டிரியன் கிளர்ச்சியை வீழ்த்த கிரேக்க இராணுவத்திற்கு இரண்டு ஆண்டுகள் ஆயின.

பாக்டிரியன் மொழி பெரும்பாலும்  αριαo (ஆர்யா) என அறியப்படுகின்ற கிரேக்க எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. கிமு 323 இல் மாமன்னன் அலெக்சாண்டர்  பாக்ட்ரியாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, கிரேக்க மொழி அவரது ஹெலனிஸ்டிக் ராஜியங்களான செலூசிட் மற்றும் கிரேக்க-பாக்ட்ரியன் பேரரசுகளின் நிர்வாக மொழியாக சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக நீடித்திருந்தது. பின்னர், குஷான் பேரரசு நிர்வாக நோக்கங்களுக்காக கிரேக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டது என்றாலும் மீண்டும் பாக்ட்ரியன் மொழிக்கே மாறியது. 

1993இல் கண்டுபிடிக்கப்பட்ட பாக்ட்ரியன் ரபாதக் கல்வெட்டு (Bactrian Rabatak inscription)குஷான் அரசர் கனிஷ்கர் (கி.பி. 127) பாக்ட்ரியன் ("ஆரிய மொழி") மொழியை நிர்வாக மொழியாகத் தக்க வைத்துக் கொண்டு  கிரேக்க  "அயோனியன்" மொழியைக்  கைவிட்டதாக இக்கல்வெட்டு கூறுகிறது.

இதன் விளைவாக, கிரேக்க மொழி அதிகாரப்பூர்வ பயன்பாட்டிலிருந்து குறைந்து, பாக்ட்ரியன் மட்டுமே எஞ்சியிருந்தது. ஆயினும், கிரேக்க எழுத்துரு பாக்ட்ரியன் மொழியை எழுதப் பயன்படுத்தப்பட்டது. 

தொடர்ச்சியான மலைசார்ந்த தஜிகிஸ்தானின் இயற்கை நிலப்பரப்பின் நிலஅமைப்பு  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்குப் புதிய நினைவுச்சின்னங்களைக் கண்டறிய பெரும் சவாலாகவே இன்றும் உள்ளது.

அடர்ந்த மலைப் பகுதிகளில் புதைந்து கிடக்கும் நினைவுச்சின்னங்களை அடையாளம் காண்பது ஆய்வாளர்களுக்கு மிகவும் கடினம். இருப்பினும், உள்ளூர்வாசிகள் இத்தகைய பணிகளில் உதவுவதன் வழி  புதிய  தொல்பொருள் சின்னங்களை ஆய்வாளர்கள் பெற முடிகின்றது.

எடுத்துக்காட்டாக, 1932 ஆம் ஆண்டில், ஜூரா அலி என்ற உள்ளூர் விவசாயி Mount Mug பகுதியில் ஆவணங்கள் நிரப்பப்பட்ட கூடை ஒன்றைக் கண்டுபிடித்தார். வரலாற்றில் சோக்ட் பிரதேசத்தில் காணப்படும் சோக்டியன் மொழியின் (Sogdian language) முதல் எழுத்து ஆவணங்கள் என்பதால் இக்கண்டுபிடிப்பு தனித்துவமானதாக ஆய்வுலகில் கருதப்படுகின்றது. அந்த ஆய்வு பண்டைய பென்ஜிகென்ட்டின் (Penjikent) குடியேற்றத்தைப் பற்றி கண்டுபிடிக்க வழிவகுத்தது.

தற்சமயம் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டும் இதே வகையைச் சேர்ந்ததுதான்.  ஹிசோர் சங்கினோவ் மாவட்டத்தில் உள்ள ஷோல் கிராமத்தில் வசித்து வரும் சங்கினோவ் கைதாலி என்பவர் மலைகளில் அவருக்கு அறிமுகமில்லாத எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டுகளைக் கண்டார்.

தஜிகிஸ்தானின் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸின் வரலாறு, தொல்லியல் மற்றும் இனவியல் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரியும் போபோமுல்லோ போபோமுல்லோவ் (Bobomullo Bobomulloev)இக்கல்வெட்டை ஆராயும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.   

இந்த ஆய்வில் இப்பாறைக் கல்வெட்டுகள் உண்மையில் பண்டைய எழுத்துக்கள் எனக் கண்டறியப்பட்டன. அவை அல்மோசி ஆற்றின் (Almosi River) வலது புரத்தில் ஓடுகின்ற துணை நதிக்கு அருகில் உள்ள பள்ளத்தாக்கின் வடக்குப் பகுதியில் உள்ளூர் மக்களிடையே கோஜா மஃப்ராஜ் (Khoja Mafraj) என்று அழைக்கப்படும் ஓர் இடத்தில் அமைந்திருந்தன.

இப்பகுதியில்  மேலும் பல கல்வெட்டுக்களை தாம் முன்னர் பார்த்திருந்ததாகவும் அந்த உள்ளூர்வாசி தெரிவித்தார். எனினும் பனிச்சரிவு காரணமாக, கல்வெட்டுகளுடன் கூடிய துண்டுகள் குன்றின் அடிவாரத்தில் விழுந்து சிதைந்திருக்கலாம். தப்பிப்பிழைத்த இப்பகுதி ஒரு தட்டையான பாறை மேற்பரப்பில் மூன்று வரிகளில் செதுக்கப்பட்டுள்ளது. அதில் இருபத்தி மூன்று எழுத்துக்கள் உள்ளன.

கிரேக்க மக்களையும், கிரேக்க பண்பாட்டையும்   மத்திய தரைக்கடலில் இருந்து வெகு தொலைவில் உள்ள ஆசியா வரையிலான நாடுகளுக்கு கொண்டு செல்வதில் அலெக்சாண்டர் தி கிரேட் சிறப்பிடம் பெறுகின்றார்.

கிமு 323 முதல் 331 வரையிலான ஹெலனிஸ்டிக் காலம், மேற்கு மற்றும் மத்திய ஆசியாவில் கிரேக்கர்களின் வருகையால் பண்பாட்டு  மாற்றங்களை அறிமுகப்படுத்தியது.

பாக்ட்ரியாவின் கிழக்குப் பகுதியில் தனித்துவமிக்க கிரேக்க-பாக்டீரிய  பேரரசு  இருந்தது.  கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரோடோடஸ், கிரேக்க-பாரசீகப் போர்களின் போது (கிமு 499-449), சிரேனைக்காவில் உள்ள கிரேக்க காலனியான பார்காவை ஒன்பது மாதங்கள் முற்றுகையிட்ட பிறகு, பாரசீக மன்னர் டாரியஸ் (King Darius) அந்நகரத்தின் மக்களை அடிமைப்படுத்தி “அவர்கள் வாழ்வதற்காக இந்த பாக்ட்ரியா  நகரத்தைக் கொடுத்தார்" எனக் குறிப்பிடுவதையும் காண்கிறோம்.

ஆயினும், அலெக்சாண்டரின் வெற்றி அதனை அடுத்த நிகழ்வுகள் நடந்த காலவாக்கில்தான் இப்பகுதியில் கிரேக்கர்களின் வருகையும் இருப்பும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்தது. அவரது மரணத்திற்குப் பிறகு, இது  ஹெலனிஸ்டிக் காலத்தில் மத்திய கிழக்கின் பெரும்பகுதியை ஆட்சி செய்த கிரேக்க-மாசிடோனிய  பேரரசின்  தொடர்ச்சியாக கிழக்கு செலூசிட் பேரரசு என    மாற்றம் கண்டது.   

-சுபா

3.1.2025


குறிப்பு உதவி: https://greekreporter.com/.../rock-inscriptions-greek.../