Monday, October 20, 2014

என் டைரியிலிருந்து.... சில குறிப்புகள்..!

Change does not roll in on the wheels of inevitability, but comes through continuous struggle. And so we must straighten our backs and work for our freedom. 
-Martin Luther King, Jr.

இதனை வாசித்த போது என் மனதில் எழுந்த சிந்தனை...

போராட்டங்கள் எப்போதுமே வெற்றியில் தான் முடிய வேண்டுமா? தோல்வியும் கூட அடுத்த கட்ட பரிமாணத்தை முன் வைப்பதாக அமைய வாழ்க்கை காட்டும் வழிதான்!

ஒரு சுதந்திர நிலையை நோக்கியதாக அமைகின்ற பயணங்கள் எதுவும் சுலபமாக கைக்குக் கிடைத்ததாக உலக வரலாறு காட்டிக் கொண்டிருக்கவில்லை. தொடர்ந்த போராட்டம்.. அதில் சில வெற்றிகள், பல தோல்விகள்.. இவை அனைத்தும் கொடுக்கும் அனுபவப் பாடங்கள்.. இவையே கண் முன் தெரியும் நிதர்சனம்.

தோல்வி கொடுக்கும் பாடங்கள் அடுத்த கட்ட வெற்றியை அமைக்கும் படிகளாகத் தான் அமைகின்றன. தோல்வியின் சுவடுகள் நம் மனத்தை நோகச் செய்ய நாமே அனுமதிக்க வேண்டாம்.. நம் சிந்தனை, நமது சுய லட்சியத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கியதாக மட்டும் இருக்கட்டும்!

சுபா

No comments:

Post a Comment