Friday, April 1, 2011

Oster Glocken - ஈஸ்டர் மணிகள்

ஞாயிற்றுக் கிழமை ஸ்பெஷல் வேண்டாமா.. இதோ ஒன்று... என் தோட்டத்திலிருந்து..! Oster Glocken (ஓஸ்டர் க்லோக்கன்) என்று டோய்ச் பேச்சு வழக்கு மொழியில் சொல்லப்படும் பூக்கள். ஈஸ்டர் மணிகள் என்று மொழி பெயர்க்கலாம். இதன் தாவரப் பெயர் Narzissen (Narcissus). விக்கிபீடியாவில் http://en.wikipedia.org/wiki/Narcissus_(plant) மேலும் தகவல் பெறலாம். இவை முழுதும் மஞ்சளாக, முழுதும் வெள்ளையாக, வெள்ளையும் மஞ்சளும் கலந்து, வெள்ளையும் ஆரஞ்சு நிறமும் கலந்து, ஆரஞ்சும் மஞ்சளும் கலந்து என பல வகையில் இருக்கின்றன. குறிப்பாக கிற்ஸ்துவ மதத்தினர் ஈஸ்டர் கொண்டாடும் இம்மாதத்தில் இது பல இடங்களில் பூத்திருப்பதை பார்க்கலாம். பூக்கள் அனேகமாக 3லிருந்து 4 வாரங்கள் செடியில் பூத்திருக்கும். பின்னர் இலைகள் துவண்டு காய்ந்து சருகாகிவிடும். நிலத்தின் அடியில் இருக்கும் செடியின் கிழங்கு கெட்டுப் போகாது. மீண்டும் பனிக்காலம் முடிந்து வசந்த காலம் தொடங்கும் போது இவை மீண்டும் முளைக்கும். வசந்த கால பூக்களின் வகையைச் சார்ந்தது இது. அன்புடன் சுபா

No comments:

Post a Comment