Saturday, January 17, 2004

Jana

இணையத் தொடர்பு இருப்பதனால் நமக்குக் கிடைக்கின்ற பல நண்மைகளைப் பற்றி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

அதில் மிக முக்கியமாக நான் கருதுவது உறவுகளையும் நண்பர்களையும் நாம் தொடர்பு கொள்ள இணையம் சார்ந்த தொழில் நுட்பம் நமக்குக் கொடுத்திருக்கும் வாய்ப்புதான். இணையத் தொடர்புகளின் வழி மின்னஞ்சல் வசதிகள் வந்த பிறகு குடும்பத்தாரை விட்டு பிரிந்திருப்பதோ நண்பர்களை விட்டு தூரத்தில் இருப்பதோ மிகப் பெரிய மனக்கவலையாகத் தெரிவதில்லை. அதற்கும் லாக புத்தம் புதிய நண்பர்கள், இதுவரை நாம் முகம் ர்த்திராத நண்பர்கள் நமக்கு அறிமுகமாகி ழ்க்கையில் மேலும் மகிழ்ச்சியை நமக்கு அளிப்பதை நினைக்கும் போது இனையத் தொழில்நுட்பத்திற்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை.


கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதவாக்கில் சன் தொலைகாட்சியில் ஒரு சிறப்பு அறட்டை அறங்கம் நிகழ்ச்சி வழி அழகி மென்பொருள் உருவாக்கிய விஷியைக் காண முடிந்தது. அப்போது அவரது விடா முயற்சியைப் பாராட்டி நானும் அவரது வலைப்பக்கத்தில் வாழ்த்து அனுப்பியிருந்தேன். இப்போது அவர் வழியாக மனதை நெகிழவைக்கும் ஒரு தகவலைத் தெரிந்து கொள்ள முடிந்ததை நினைத்து உண்மையில் மகிழ்ச்சியடைறேன்.

அழகி வலைப்பக்கத்தில் ஒரு பகுதியில் ஜனா என்ற 13 வயது சிறுவனைப் பற்றிய ஒரு சிறப்புப் பக்கத்தையே விஷி உருவாக்கியிருக்கின்றார். ஒரு சிறுவனுக்கு முழு வலைப்பக்கமே உருவாகியிருக்கின்றது என்றால் நிச்சயமாக அவன் ஒரு அசாதாரணமான ஒரு சிறுவனாகத்தானே இருக்க முடியும்! ஆமாம்! நிச்சயமக அவன் ஒரு அசாதாரணமான ஒரு சிறுவன் தான்!

இங்கு ஜெர்மனியிலுள்ள எனது இலங்கைத் தமிழ் நண்பருடன் நேற்று பேசிக் கொண்டிருந்தேன். ஒரு மாத விடுமுறைக்குப் பிறகு பேசுவதால் வாழ்த்துக் கூறி ஆரம்பிக்கலாமே என ஆரம்பித்த எனக்கு அவரது அழுகை தோய்ந்த குரலைக் கேட்டு அதிர்ச்சியாகிட்டது. அவரது 17 வயது மகன் பள்ளி விடுமுறையில் வேலைக்குச் சென்றவன், தவறுதலாக பலகை வெட்டும் இயந்திரத்தில் கையைவிட்டதால் விரல்களை இழந்திருக்கின்றான். 28 மணிநேர அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு துண்டாகிப் போன 4 விரல்களில் 3 விரல்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக இணைத்திருக்கின்றனர். இருந்தும் சுட்டு விரலை நாழி கடந்ததால் இணைக்க முடியவில்லை. இளைஞனான அவனுக்கு இப்போது மன அமைதிக்கு ஆறுதல் வார்த்தைகள் தான் மருந்து என்று நேற்று வருத்தத்தோடு தெரிவித்துக் கொண்டிருந்தனர் அவனது அன்பான பெற்றோர்கள். இந்த நிகழ்வு மனத்திறையில் இருந்து அகலாத நிலையிலேயே விஷ் மின்னஞ்சலில் எனக்குச் சுட்டிக்காட்டியிருந்த வலைப்பக்கத்திற்குச் சென்று காண்போமே என்று வலைப்பக்கத்தைத் தட்டிய எனக்கு பெரிய ஆச்சரியம்.

மிகப் பெரிய விபத்திற்குப் பிறகு தனது கைகளையும் காலையும் இழந்த நிலையிலிருக்கும் ஜனா கைகள் இல்லாத நிலையிலேயே மிக சிறப்பாக ஓவியம் வரைய ஆரம்பித்திருக்கின்றான். அவனது ஆர்வம் பள்ளியளவில் நின்றுவிடவில்லை. மாறாக பற்பல போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளையும் தட்டிச் சென்றிருக்கின்றான் ஜனா.

உடல் ஊணம் கணினி தொழில் நுட்பத்தில் ஈடுபடுவதற்கு நிச்சயமாகத் தடையாக இருக்கக் கூடாது. தாளிலும் பென்சிலும் வர்ணமும் கொண்டு சித்திரம் தீட்டிக் கொண்டிருக்கும் ஜனா கணினியிலும் மென்பொருட்களைப் பயன்படுத்தி ஓவியங்களை உருவாக்க முடியும் என்பதை இந்த வலைப்பக்கம் குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றது. இம்மாதிரியான முயற்சிகள்
ஊக்குவிக்கப்படவேண்டும்.

ஜனாவைப் பற்றிய மேலும் பல தகவல்கள், அவனது வெற்றிப் பட்டியல், அவனது ஓவியங்கள் இப்படிப் பல விஷயங்கள் இந்தப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன ( http://www.azhagi.com/jana/ ). அனைவரும் நிச்சயமாக பார்க்க வேண்டிய ஒரு பகுதிதான் இது. வாழ்க்கையே போராட்டம் நிறைந்ததுதான். அந்தப் போராட்டங்களை மனிதர்கள் நாம் எப்படி எதிர்கொள்கின்றோம் என்பதைப் பொறுத்துத்தான் நமது வெற்றியின் அளவு அடங்கியிருக்கின்றது. அந்த வகையில் ஜனா ஒரு வெற்றியாளர் தான். அவன் மேலும் மேலும் வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமென்றால் வெறும் வாழ்த்துகள் மட்டும் போதாது. மாறாக கணினி, மற்றும் இணையகல்வி அறிமுகங்கள் அவனுக்குக் கிடைக்க உலகத் தமிழர்கள் நாம் நிச்சயமாக உதவவேண்டும் என்று நினைக்கின்றேன்.

[ Thanks http://www.azhagi.com ]

No comments:

Post a Comment