Sunday, September 14, 2003

Kannathaasan Poem

ஏறக்குறைய எட்டு வருடங்களுக்கு முன்னர் தமிழை நான் தீவிரமாக கற்க ஆரம்பித்த காலத்தில் நான் வாசித்த கண்ணதாசனின் ஒரு கவிதை. கவிதயின் வரிகள் அழகாக இருந்ததாலும் மனதைத் தொடும் வகையில் அமைந்திருந்ததாலும் அதனை எனது டைரியில் குறித்து வைத்திருந்தேன். நீளமான அந்த கவிதையில் எனக்குப் பிடித்த சில வரிகள்.

காலமகள் கோலம்


காலமெனும் தேவமகள் கையிலுள்ள
துலாக்கோலில்
எந்த எடை எப்பொழுது எவ்வளவெண்
றாரறிவார்..?

.....

கடல் அருகே வீற்றிருந்தும் கடுந்தாகம்
வரும்போதே
கடவுளெனும் ஒருவரது கைச்சரக்கு
நினைவு வரும்.!

காக்கை குருவியைப் போல் கவலையின்றி
நீ இருந்தால்
யாக்கை கொடுத்தவனை யார் நினைப்பார்
இவ்வுலகில்

ஓடுகின்ற வண்டியெல்லாம் ஊர்சென்று
சேர்ந்து விட்டால்
தேடுகின்ற கோவிலை நீ தேடாமற்
போய்விடுவாய்!

'எல்லாம் அவன் செயலே' என்பதற்கு
என்ன பொருள்?
உன்னால் முடிந்ததெல்லாம் ஓரளவு
என்று பொருள்..!
- கண்ணதான்

No comments:

Post a Comment