அப்துல் கலாம் அவர்களை 2003 ஆம் ஆண்டு நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது. தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்று பாதுகாப்பு ஆவணப்படுத்தல் முயற்சிகளை பாராட்டி பேசினார். அப்போது இந்திய அரசு தொடங்கியிருந்த மில்லியன் நூல்கள் மின்னாக்கத் திட்டத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையுய் இணைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்ததன் பேரில் நூறு பழம் நூல்களை முதல் கட்டப் பணியாக நானும் நா. கண்ணனும் திட்டமிட்டு செயல்படுத்தினோம் என்பது இன்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு.
இன்று சென்னையில் எனக்கு அப்துல் கலாம் அவர்கள் நினைவாக அவரைச் சிறப்பிக்கும் வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜெய்தேன் புரொடக்ஷன் ஏற்பாட்டில் நடைபெறும் விருதளிப்பு விழாவில் Dr.Kalaam visionary women of the year 2025 விருது எனக்கு வழங்கப்படுகிறது. நேரில் கலந்து கொள்ள என்னால் இயலவில்லை. ஆயினும் டாக்டர் கலாம் அவர்களது பெயரில் வழங்கப்படும் இந்த விருது மனதிற்குப் பெருமை அளிக்கிறது.
-சுபா
27.7.2025
No comments:
Post a Comment