Sunday, August 19, 2012

பெகோனியா


நண்பர்களே,

பெகோனியா என்னும் செடி வகை மனதைக் கவரும் பல வர்ணங்களிலான மலர்களைத் தரக்கூடிய ஒரு செடி. இது கோடை காலத்தில் மட்டும் முளைத்து குறிப்பாக ஜூலை முதல் செப்டம்பர் வரை பூத்துக்குலுங்கும் செடி. இதில் நம் கை அளவை விட பெரிய மலர்கள் உள்ள செடி வகைகள் உண்டு. மிக மிகச் சிறிதான பூக்கள் உள்ள செடி வகைகளும் உண்டு.

நான் கடந்த 2 ஆண்டுகளாக பெகோனியா கிழங்குகளை வாங்கி தொட்டியில் வைத்து வளர்த்து வருகின்றேன். வெள்ளை, சிவப்பு, ரோஸ் நிறங்களில் இந்த மலர்கள் உள்ளன. கடந்த ஆண்டு மஞ்சள் நிறப்பூச்செடியும் இருந்தது.

இன்று அதில் சிவப்பு நிற மலர் செடி ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக அமைகின்றது.



பெகோனியா மலரின் மொட்டு




இரண்டு மலர்கள்.. ரோஜாவைப் போல சற்று தோன்றினாலும் இது வேறு விதமான ஒரு மலர்





இரண்டு கைகளின் அளவில் உள்ள ஒரு பெரிய பெகோனியா மலர்



இம்மலர் வகையைப் பற்றி மேல் விபரங்கள் அறிந்து கொள்ள விக்கி செல்லலாம். http://en.wikipedia.org/wiki/Begonia

சுபா

இந்தப் பதிவுக்கு மின்தமிழில் கிடைத்த கவிதை..!


நமுட்டுச் சிரிக்கும் செவ்விதழ்! 
நாணிக் கவிழும் பூவிதழ்! 
திமிறும் இயற்கைத் தூண்டெழல் 
தீந்தேன் பாயும் அகவிதழ்.

     - ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

No comments:

Post a Comment